Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா?


காய்ந்த சருகாய்
உதிர்ந்து கிடக்கின்றன
உன் ஞாபகங்கள்.
மிச்சமிருக்கும் இலைகளுக்கு
என்னையும் அறியாமல்
உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன
என் நிழல்கள்.
பொலிவிழந்து பட்டுப் போய்
உனக்காக காத்துக் கிடக்கும்
என் மரத்திற்கு
சிதையூட்டும் முன்
. . . .
விண்ணைத் தாண்டி வருவாயா?

9 comments:

  1. // என் மரத்திற்கு
    சிதையூட்டும் முன்
    விண்ணைத் தாண்டி வருவாயா? //

    வசியப்படுத்தும் வரிகள்

    ReplyDelete
  2. @ கா.பழனியப்பன்!

    நன்றி பழனி:-)

    ReplyDelete
  3. @ வெற்றி-[க்]-கதிரவன்!

    வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  4. @ தியாவின் பேனா!

    வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க!

    ReplyDelete