Thursday, February 11, 2010

பிரிய‌ச‌கி-4

உன்னைப் பார்க்க
வரும் போதெல்லாம்
என் இதயம்
ஆம்புலன்ஸ் சைரனாகிறது!

எல்லாக் குழந்தைக‌ளும்
அழகாய் இருப்ப‌துபோல்-உன்
எல்லா பாக‌ங்க‌ளும் அழகு!

தொட்டு விடும் தூரத்தில்
இருக்கிறேன் நான்
மொட்டு பூவாகிடும் கணத்தில்
பார்க்கிறாய் நீ!

ஏழையின் சிரிப்பினில்
இறைவனைக் காண்கிறேன்
உன் சிரிப்பினில்
இறைவனாய் ஆகின்றேன்!

தாவணியில்
தாவும் அணிலாகிறாய்
சுடிதாரில்
சுடர் விடும் ஒளியாகிறாய்
புடவையிலோ
புறாக் கூண்டாகிறாய்!

4 comments:

  1. //எல்லாக் குழந்தைக‌ளும்
    அழகாய் இருப்ப‌துபோல்-உன்
    எல்லா பாக‌ங்க‌ளும் அழகு!//

    லவ்லி

    ReplyDelete
  2. பின்னி பெடலேடுத்துட்டிங்க போங்க‌
    // எல்லாக் குழந்தைக‌ளும்
    அழகாய் இருப்ப‌துபோல்-உன்
    எல்லா பாக‌ங்க‌ளும் அழகு //

    ReplyDelete
  3. @ கவிதை காதலன்!

    வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete
  4. @ கா.பழனியப்பன்!

    நன்றி பழனி!

    ReplyDelete