Thursday, December 31, 2009

Top 10 Movies-2009

இந்த வருடத்தில் நான் பார்த்த தமிழ் படங்கள் பின் வருமாறு:

1.படிக்காதவன்
2.வில்லு
3.காதல்னா சும்மா இல்லை
4.வெண்ணிலா கபடிக்குழு
5.த.நா.07-அல-4777
6.சிவா மனசுல சக்தி
7.தீ
8.யாவரும் நலம்
9.அயன்
10.கார்த்திக் அனிதா
11.குங்குமப்பூவும் கொஞ்சுப்புறாவும்
12.பசங்க
13.நீயூட்டனின் மூன்றாம் விதி
14.சர்வம்
15.ராஜாதிராஜா
16.மாயாண்டிகுடும்பத்தார்
17.மாசிலாமணி
18.முத்திரை
19.வால்மீகி
20.நாடோடிகள்
21.வாமனன்
22.இந்திரவிழா
23.அச்சமுண்டு அச்சமுண்டு
24.மோதி விளையாடு
25.மலை மலை
26.சிந்தனை செய்
27.பொக்கிஷம்
28.நினைத்தாலே இனிக்கும்
29.ஈரம்
30.உன்னை போல் ஒருவன்
31.சொல்ல சொல்ல இனிக்கும்
32.திரு திரு துறு துறு
33.பேராண்மை
34.கண்டேன் காதலை
35.ஆதவன்
36.யோகி
37.வேலுபிரபாகரனின் காதல் கதை
38.ரேனிகுண்டா
39.கந்தசாமி
40.லாடம்
41.வேட்டைக்காரன்
42.நான் கடவுள்


இந்த‌ வ‌ருட‌ம் தமிழில் வ‌ந்த‌ நல்ல‌ ப‌ட‌ங்க‌ளின் எண்ணிக்கை மிக‌வும் குறைவு என்ப‌தாக‌த்தான் தோன்றுகிற‌து.என‌க்குப் பிடித்த‌ 10 ப‌ட‌ங்க‌ளில் நான் 'ரீமேக்' ப‌ட‌ங்க‌ளை சேர்க்க‌வில்லை.

1.வெண்ணிலா கபடிக்குழு
2.யாவரும் நலம்
3.நான் கடவுள்
4.அச்சமுண்டு அச்சமுண்டு
5.ஈரம்
6.ரேனிகுண்டா
7.அயன்
8.திரு திரு துறு துறு
9.சிவா மனசுல சக்தி
10.பசங்க


அனைவ‌ருக்கும் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக‌ள்!

Wednesday, December 30, 2009

Top 10 Songs-2009

தினம் தினம் எத்தனையோ பாடல்களைக் கேட்க நேர்ந்தாலும்,சில பாடல்கள் மட்டும்,ஏதோ சில காரணங்களினால் நம் மனதுக்கு மிக பிடித்த பாடலாகிவிடுகின்றன.இந்த வருடத்தை திரும்பி பார்க்கும் பொழுது,இந்த 10 பாடல்கள்தான் நான் அதிகமான முறை கேட்ட,கேட்க‌ விருப்பப்படுகின்ற‌‌ பாடல்களாக இருக்கின்றன.


1. அங்காடித் தெரு‍‍‍‍‍‍‍‍-‍‍‍உன் பேரை சொல்லும்‍‍-இசை:G.V.பிரகாஷ்குமார்
2. அய‌ன்‍-விழி மூடி யோசிக்கையில்-இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
3. அச்ச‌முண்டு அச்ச‌முண்டு-க‌ண்ணில் தாக‌ம்-இசை:கார்த்திக் ராஜா
4. நினைத்தாலே இனிக்கும்-அழகாய் பூக்குதே‍-‍இசை:விஜய் அந்தோனி
5. பொக்கிஷம்-நிலா நீ காற்று-‍இசை:ச‌பேஷ் முர‌ளி
6. குளிர் 100-ம‌ன‌செல்லாம் உன்னை -இசை:பாபோ ச‌ஷி
7. ஈர‌ம்-ம‌ழையே ம‌ழையே-இசை:தம‌ன்
8. குங்கும‌ப் பூவும் கொஞ்சும் புறாவும்-சின்ன‌ஞ் சிறுசுக‌-‍இசை:யுவ‌ன் ஷங்க‌ர் ராஜா
9. லீலை-ஜில்லென்று ஒரு கலவரம்‍-‍இசை:சதீஷ் சக்ரவர்த்தி
10. யாவரும் நலம்-காற்றிலே வாச‌மே‍-ச‌ங்க‌ர்-எசான்-லாய்

Tuesday, December 22, 2009

வேட்டைக்காரன்-விமர்சனம்


பாபு சிவன் இயக்கத்தில், விஜயின் 49- வது படமாக வெளிவந்திருக்கும் படம்தான் 'வேட்டைக்காரன்'. ஏற்கெனவே 'ஃப்ளாப்' ஆன 'சத்யம்' படத்தோட கதையவே உல்டா பண்ணி வேட்டைக்காரனாக எடுத்திருக்கும் பாபுசிவன்,விஜய் இருவரின் 'மன உறுதியையும்' கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.முந்தைய படங்களில் திருப்பாச்சி,மதுரை..யிலிருந்து சென்னைக்கு வருவது போல்,இந்தப் படத்தில் விஜய் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வருகிறார்.இந்தப் படத்திலும் சின்ன வில்லன்,பெரிய வில்லன் மற்றும் இன்னும் கொஞ்சம் பெரிய வில்லனோடு மோதி அவர்களை துவம்சம் செய்கிறார்.

திருப்பாச்சி படத்திலாவது விஜய் முகத்தில் சந்தனம் பூசியிருப்பதால் வில்லனுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருந்தது. ஆனால்,இந்தப் படத்தில் டைரக்டர்,இன்னும் பல படி மேலே போய்,விஜய் நெற்றியில் மஞ்சள் கலர் ரிப்பன் இல்லையென்றால்,வில்லனுக்கு அவரை அடையாளம் தெரியாதபடி 'வித்தியாசமாக' யோசித்திருக்கிறார்.வேட்டைக்காரனை பார்க்கும் பொழுதுதான் அழகிய தமிழ் மகன்,வில்லு படங்களின் அருமை தெரிகிறது.


விஜயின் தீவிர ரசிகர்களுக்கே படத்தின் இரண்டாவது பாதி பிடிக்குமா என்று தெரியவில்லை.விஜயிற்கு பின் சினிமா உலகில் நுழைந்து,அவரோட நடிப்பை 'காப்பி' அடித்த நடிகர்களே,இன்று வித்தியாசமான (அ) நல்ல படங்களில் நடிக்க முயற்சிக்கும் பொழுது,விஜய் மட்டும் 'ஒரே' மாதிரி படங்களில் நடிப்பதை பார்க்கும் பொழுது அவர் மேல் பரிதாபம்தான் எழுகிறது.ரஜினி 'ஃபார்முலாவில்',ரஜினியே இன்று படம் நடித்தாலும் ஓடாது என்பதுதான் உண்மை.


இந்தப் படம் பார்த்து மூன்று மணி நெரம் 'Waste' பண்ணதும் இல்லாமல்,இந்தப் படத்துக்கு விமர்சனம் வேற எழுதணுமானு யோசிச்சப்ப விஜய் இந்தப் படத்தில் சொன்ன ஒரு வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது, "தெரிஞ்சவங்களுக்கு செய்கின்ற உதவி நம்மளை மட்டும்தான் காப்பாத்தும்;தெரியாதவங்களுக்கு செய்கின்ற உதவியோ நம்ம வம்சத்தையே காப்பாத்தும்".


வேட்டைக்காரன்‍-விஜய்

Friday, December 4, 2009

ஊடல்


உன்னை பிரிந்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஓடாத கடிகாரம் போல்
அசைவற்றுக் கிடக்கிறேன்!
*******
ஆறு வளைகையில்
கரையும் வளைவது போல்
நீ சிரிக்கையில்
நானும் சிரிக்கிறேன்
நீ அழுகையில்
நானும் அழுகிறேன்!
*******
ஊடலுற்ற ஒரு தருணத்தில்
காய்கறிகளை நறுக்கிக்கொண்டே
என் வார்த்தைகள்
ஒவ்வொன்றாய்
வெட்டத் தொடங்கினாய்
கடைசியில்
காயம் பட்ட உன் விரல்களுக்கு
என் வார்த்தைகளே மருந்தாகியது!
*******

Wednesday, December 2, 2009

கிழ‌க்கே போகும் ர‌யில்


ஒரே நேர் கோட்டிலிருந்த‌
தண்டவாளங்களை
பின் தொடர்ந்து சென்ற
மயக்கும் மாலை பொழுதில்
சற்று முன் பெய்த
மழையின் ஈரத்தோடு
பூ ஒன்று
தண்டவாளத்தின் மேல்
தலை வைத்து படுத்திருந்தது
அதன் ஈரத்தை
நெஞ்சில் ஏந்திய தருணத்தில்
எதிரே வந்து கொண்டிருந்த ரெயிலில்
நீ பயணித்துக் கொண்டிருந்தாய்.