Thursday, December 31, 2009

Top 10 Movies-2009

இந்த வருடத்தில் நான் பார்த்த தமிழ் படங்கள் பின் வருமாறு:

1.படிக்காதவன்
2.வில்லு
3.காதல்னா சும்மா இல்லை
4.வெண்ணிலா கபடிக்குழு
5.த.நா.07-அல-4777
6.சிவா மனசுல சக்தி
7.தீ
8.யாவரும் நலம்
9.அயன்
10.கார்த்திக் அனிதா
11.குங்குமப்பூவும் கொஞ்சுப்புறாவும்
12.பசங்க
13.நீயூட்டனின் மூன்றாம் விதி
14.சர்வம்
15.ராஜாதிராஜா
16.மாயாண்டிகுடும்பத்தார்
17.மாசிலாமணி
18.முத்திரை
19.வால்மீகி
20.நாடோடிகள்
21.வாமனன்
22.இந்திரவிழா
23.அச்சமுண்டு அச்சமுண்டு
24.மோதி விளையாடு
25.மலை மலை
26.சிந்தனை செய்
27.பொக்கிஷம்
28.நினைத்தாலே இனிக்கும்
29.ஈரம்
30.உன்னை போல் ஒருவன்
31.சொல்ல சொல்ல இனிக்கும்
32.திரு திரு துறு துறு
33.பேராண்மை
34.கண்டேன் காதலை
35.ஆதவன்
36.யோகி
37.வேலுபிரபாகரனின் காதல் கதை
38.ரேனிகுண்டா
39.கந்தசாமி
40.லாடம்
41.வேட்டைக்காரன்
42.நான் கடவுள்


இந்த‌ வ‌ருட‌ம் தமிழில் வ‌ந்த‌ நல்ல‌ ப‌ட‌ங்க‌ளின் எண்ணிக்கை மிக‌வும் குறைவு என்ப‌தாக‌த்தான் தோன்றுகிற‌து.என‌க்குப் பிடித்த‌ 10 ப‌ட‌ங்க‌ளில் நான் 'ரீமேக்' ப‌ட‌ங்க‌ளை சேர்க்க‌வில்லை.

1.வெண்ணிலா கபடிக்குழு
2.யாவரும் நலம்
3.நான் கடவுள்
4.அச்சமுண்டு அச்சமுண்டு
5.ஈரம்
6.ரேனிகுண்டா
7.அயன்
8.திரு திரு துறு துறு
9.சிவா மனசுல சக்தி
10.பசங்க


அனைவ‌ருக்கும் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக‌ள்!

Wednesday, December 30, 2009

Top 10 Songs-2009

தினம் தினம் எத்தனையோ பாடல்களைக் கேட்க நேர்ந்தாலும்,சில பாடல்கள் மட்டும்,ஏதோ சில காரணங்களினால் நம் மனதுக்கு மிக பிடித்த பாடலாகிவிடுகின்றன.இந்த வருடத்தை திரும்பி பார்க்கும் பொழுது,இந்த 10 பாடல்கள்தான் நான் அதிகமான முறை கேட்ட,கேட்க‌ விருப்பப்படுகின்ற‌‌ பாடல்களாக இருக்கின்றன.


1. அங்காடித் தெரு‍‍‍‍‍‍‍‍-‍‍‍உன் பேரை சொல்லும்‍‍-இசை:G.V.பிரகாஷ்குமார்
2. அய‌ன்‍-விழி மூடி யோசிக்கையில்-இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
3. அச்ச‌முண்டு அச்ச‌முண்டு-க‌ண்ணில் தாக‌ம்-இசை:கார்த்திக் ராஜா
4. நினைத்தாலே இனிக்கும்-அழகாய் பூக்குதே‍-‍இசை:விஜய் அந்தோனி
5. பொக்கிஷம்-நிலா நீ காற்று-‍இசை:ச‌பேஷ் முர‌ளி
6. குளிர் 100-ம‌ன‌செல்லாம் உன்னை -இசை:பாபோ ச‌ஷி
7. ஈர‌ம்-ம‌ழையே ம‌ழையே-இசை:தம‌ன்
8. குங்கும‌ப் பூவும் கொஞ்சும் புறாவும்-சின்ன‌ஞ் சிறுசுக‌-‍இசை:யுவ‌ன் ஷங்க‌ர் ராஜா
9. லீலை-ஜில்லென்று ஒரு கலவரம்‍-‍இசை:சதீஷ் சக்ரவர்த்தி
10. யாவரும் நலம்-காற்றிலே வாச‌மே‍-ச‌ங்க‌ர்-எசான்-லாய்

Tuesday, December 22, 2009

வேட்டைக்காரன்-விமர்சனம்


பாபு சிவன் இயக்கத்தில், விஜயின் 49- வது படமாக வெளிவந்திருக்கும் படம்தான் 'வேட்டைக்காரன்'. ஏற்கெனவே 'ஃப்ளாப்' ஆன 'சத்யம்' படத்தோட கதையவே உல்டா பண்ணி வேட்டைக்காரனாக எடுத்திருக்கும் பாபுசிவன்,விஜய் இருவரின் 'மன உறுதியையும்' கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.முந்தைய படங்களில் திருப்பாச்சி,மதுரை..யிலிருந்து சென்னைக்கு வருவது போல்,இந்தப் படத்தில் விஜய் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வருகிறார்.இந்தப் படத்திலும் சின்ன வில்லன்,பெரிய வில்லன் மற்றும் இன்னும் கொஞ்சம் பெரிய வில்லனோடு மோதி அவர்களை துவம்சம் செய்கிறார்.

திருப்பாச்சி படத்திலாவது விஜய் முகத்தில் சந்தனம் பூசியிருப்பதால் வில்லனுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருந்தது. ஆனால்,இந்தப் படத்தில் டைரக்டர்,இன்னும் பல படி மேலே போய்,விஜய் நெற்றியில் மஞ்சள் கலர் ரிப்பன் இல்லையென்றால்,வில்லனுக்கு அவரை அடையாளம் தெரியாதபடி 'வித்தியாசமாக' யோசித்திருக்கிறார்.வேட்டைக்காரனை பார்க்கும் பொழுதுதான் அழகிய தமிழ் மகன்,வில்லு படங்களின் அருமை தெரிகிறது.


விஜயின் தீவிர ரசிகர்களுக்கே படத்தின் இரண்டாவது பாதி பிடிக்குமா என்று தெரியவில்லை.விஜயிற்கு பின் சினிமா உலகில் நுழைந்து,அவரோட நடிப்பை 'காப்பி' அடித்த நடிகர்களே,இன்று வித்தியாசமான (அ) நல்ல படங்களில் நடிக்க முயற்சிக்கும் பொழுது,விஜய் மட்டும் 'ஒரே' மாதிரி படங்களில் நடிப்பதை பார்க்கும் பொழுது அவர் மேல் பரிதாபம்தான் எழுகிறது.ரஜினி 'ஃபார்முலாவில்',ரஜினியே இன்று படம் நடித்தாலும் ஓடாது என்பதுதான் உண்மை.


இந்தப் படம் பார்த்து மூன்று மணி நெரம் 'Waste' பண்ணதும் இல்லாமல்,இந்தப் படத்துக்கு விமர்சனம் வேற எழுதணுமானு யோசிச்சப்ப விஜய் இந்தப் படத்தில் சொன்ன ஒரு வசனம்தான் ஞாபகத்திற்கு வந்தது, "தெரிஞ்சவங்களுக்கு செய்கின்ற உதவி நம்மளை மட்டும்தான் காப்பாத்தும்;தெரியாதவங்களுக்கு செய்கின்ற உதவியோ நம்ம வம்சத்தையே காப்பாத்தும்".


வேட்டைக்காரன்‍-விஜய்

Friday, December 4, 2009

ஊடல்


உன்னை பிரிந்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஓடாத கடிகாரம் போல்
அசைவற்றுக் கிடக்கிறேன்!
*******
ஆறு வளைகையில்
கரையும் வளைவது போல்
நீ சிரிக்கையில்
நானும் சிரிக்கிறேன்
நீ அழுகையில்
நானும் அழுகிறேன்!
*******
ஊடலுற்ற ஒரு தருணத்தில்
காய்கறிகளை நறுக்கிக்கொண்டே
என் வார்த்தைகள்
ஒவ்வொன்றாய்
வெட்டத் தொடங்கினாய்
கடைசியில்
காயம் பட்ட உன் விரல்களுக்கு
என் வார்த்தைகளே மருந்தாகியது!
*******

Wednesday, December 2, 2009

கிழ‌க்கே போகும் ர‌யில்


ஒரே நேர் கோட்டிலிருந்த‌
தண்டவாளங்களை
பின் தொடர்ந்து சென்ற
மயக்கும் மாலை பொழுதில்
சற்று முன் பெய்த
மழையின் ஈரத்தோடு
பூ ஒன்று
தண்டவாளத்தின் மேல்
தலை வைத்து படுத்திருந்தது
அதன் ஈரத்தை
நெஞ்சில் ஏந்திய தருணத்தில்
எதிரே வந்து கொண்டிருந்த ரெயிலில்
நீ பயணித்துக் கொண்டிருந்தாய்.

Thursday, November 26, 2009

NH-4


நீண்ட தூர சாலையோர பயணமொன்றின்
NH-4 சாலையில்
ஒரு Lane-ல் நானும்
மறு Lane-ல் நீயும்
பயணித்துக் கொண்டிருந்தோம்
உனக்கான வாழ்வை என் கண்களிலும்
எனக்கான கனவுகளை உன் சிரிப்பினிலும்
செதுக்கிக் கொண்டிருந்தோம்.
இருவரும் இணைய நேரிடும் புள்ளியொன்றில்
திடீரென்று
யு-டர்ன் எடுத்து எனை கடந்து
கனவுகளை காற்றில் வீசிச் சென்றாய்
எதிரே தெரியும்
பள்ளத்தாக்கில் தெரிகிறது
எனக்கான வாழ்வு.

Friday, October 16, 2009

16 வயதினிலே...



சிறு வயதில்
கிளி ஒன்று வளர்த்தேன்
சிறகு முளைத்ததும்
பறந்து சென்றது.

ஆசையாய்
வளர்த்த கோழி
சொந்தக்காரர் ஒருவரின்
வருகையால் கறியாகியது.

அழகாக நீந்தித் திரிந்த மீன்கள்
என் தவறால்
ஒரு நாள் நீர்தொட்டி உடைந்து
மதிய சாப்பாட்டிற்கு குழம்பாயின

ஆசையாய் வளர்க்கும்
அத்தனையையும்
ஒரு நாள் பிரிய நேர்வதால்
எதையும் வளர்க்காமல்
சும்மாவே இருந்தேன்...

பின்னொரு நாள்
உன்னை பார்த்த பின்பு
காதலை வளர்க்க ஆரம்பித்தேன்
வழக்கம் போல்
நீயும் எனை பிரிந்து சென்றாய்

ஆனால்
இன்று வரை புரியாத ஒன்று
கிளி,கோழி,மீனை பிரிந்ததற்காவது
ஏதோ ஒரு காரணமிருந்தது...

Tuesday, October 13, 2009

தூண்டில்



தூண்டிலில் சிக்கிய மீனொன்று
துடி துடித்துக்கொண்டே
கடைசியாய்...
ஒரு முறை
என்னை பார்த்து சிரித்தது
அந்தக் கணத்தில்
நான்
உன்னை பார்த்து சிரித்தேன்!

Monday, October 12, 2009

Cigarette Kills...




நடு நடுங்க வைக்கும்
கொடுங் குளிர் பனிக் காலத்தில்
உன் நினைவுகள்
ஒவ்வொன்றாய் எடுத்து
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்
எரியும் தீக்கனல்களில் தெரிகிறது உன் முகம்...

உனை மறக்க நினைத்து
கிளாஸில் ஊற்றும்
ஆல்கஹாலிலும்
பற்ற வைக்கும்
சிகரெட் முனையிலும்
என்னை பார்த்து சிரிக்கின்றாய்
இப்பொழுது தெரிகிறது
"CIGARETTE SMOKING IS INJURIOUS TO HEALTH"

Tuesday, October 6, 2009

Top 10 Songs-September

1) பேராண்மை-காடு களை கட்ட-‍இசை:வித்யாசாகர்

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/Peraanmai/02%20-%20Kaadu%20Kalai%20Katta%20-%20Madhu%20Balakrishnan.mp3

2) லீலை-ஜில்லென்று ஒரு கலவரம்‍-‍இசை:சதீஷ் சக்ரவர்த்தி

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/Leelai/Jilendru%20Oru%20Kalavaram%20-%20Satish%20Chakravarthy.mp3

3) ஆத‌வ‌ன்-‍‍வாராயோ வாராயோ-‍இசை:ஹாரிஸ் ஜெயராஜ்

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/Aadhavan/04%20-%20Vaarayao%20Vaarayao%20-%20Unnikrishnan,%20Chinmayee,%20Mega.mp3

4) யோகி-‍யாரோடு யாரோ-‍இசை:யுவ‌ன் ஷங்க‌ர் ராஜா

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/Yogi/02%20-%20Yaarodu%20Yaaro%20-%20Yuvanshankar%20Raja,%20Ustad%20Sultan%20Khan.mp3

5) க‌ண்ணுக்குள்ளே-நான் பிறந்த‌ நேர‌மா-இசை:இளைய‌ராஜா

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/Kannukulle/Naan%20Pirandha%20Nerama%20-%20Priya.mp3

6) ஈர‌ம்-ம‌ழையே ம‌ழையே-இசை:தம‌ன்

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/Eeram/Mazhaiye%20Mazhaiye%20-%20Ranjith.mp3

7) யாதுமாகி-தகிட‌ தகிட‌-இசை:ஜேம்ஸ் வசந்தன்

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/Yathumagi/Thigatta%20Thigatta%20-%20Deepa%20Miriam.mp3

8) அகம் புறம்-‍கண்கள் மோதி-இசை:சுந்தர் C பாபு

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/Agam%20Puram/Kangal%20Modhi%20-%20Naresh%20Iyer,%20Vijitha.mp3

9) அங்காடி தெரு‍‍‍‍‍‍‍‍-‍‍‍கதைகளைப் பேசும்‍‍-இசை:G.V.பிரகாஷ்குமார்

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/Angadi%20Theru/Kadaigal%20Pesum%20-%20Benny%20Dayal,%20Himshika.mp3

10) ஜக்குபாய்-ஏழு வண்ணத்தில்‍-இசை ரஃபி

http://www.123musiq.com/SOURCE/latest%20tamil%20movie%20songs/JagguBhai/3%20-%20Yezhu%20Vannathil%20-%20Hariharan,%20Maheswari%20Rani.mp3

Wednesday, September 23, 2009

சொற்கொலை



என்னிடமிருந்து சொற்கள்
ஒவ்வொன்றாய்
உனை நோக்கி
நகரத் தொடங்கிய ஒரு கணத்தில்
யாதொரு கார‌ணம‌மும் இன்றி
ஏழு மலைகளுக்கு அப்பால் போய்
ஒளிந்து கொண்டாய்
என்னிடமும் திரும்பி வர முடியாமல்
நீ இருக்கும் இடமும் தெரியாமல்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
அவை ஒவ்வொன்றாய்
தற்கொலை செய்யத் தொடங்கின
என்றாவது ஒருநாள்
துர்கனவின் நடுவில்
நீ விழிக்க நேர்கையில்
அவற்றின் ஆன்மா சாந்தி அடையக்கூடும்...



Saturday, September 19, 2009

உன்னை போல் ஒருவன்‍-விமர்சனம்




இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் விளையாடி தோற்றாலும் சரி,கொல்கத்தாவில் தோற்றாலும் சரி,எப்படி ஒட்டு மொத்த தேசமே அது குறித்து கவலைப்படுகிறதோ அது போல,நாட்டின் எந்த பகுதியில் தீவிரவாதத்தால் குண்டு வெடித்தாலும் ஒட்டு மொத்த தேசமே அதை எதிர்த்துப் போராட வேண்டும்.அதேபோல் தண்டனைகள் கடுமையாக்கப்படாத வரை,தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது என்பதுதான் 'உன்னை போல் ஒருவன்' படத்தின் கதை.

இந்த மாதிரி ஒரு 'கதையுள்ள' படத்தை ரீமேக்கியதற்காகவே கமலையும்,இயக்குனரையும் பாராட்ட வேண்டும்.அதேபோல் ஒரிஜினல் படத்திற்கும்,இதற்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் மிகாமல் பார்த்துக் கொண்டதற்காகவும்.ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயர் 'ஒன் டே மேட்சில்' ஒரு 'Style'-‍ லும் டெஸ்ட் மேட்சில் மற்றொரு 'Style'-‍ லும் விளையாடுவது போல் கமல்,மோகன்லால் இருவருமே விளையாடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவிற்கு அப்புறம் படத்தில் தனிப்பட்டு பாராட்டப்பட வேண்டிய மற்றொரு விஷயம் படத்தின் வசனங்கள்.பல இடங்களில் நம்மை 'அட' போட வைக்கிறார் வசனகர்த்தா இரா.முருகன்.'இந்திய கிரிக்கெட் டீம் தோத்தால் யாரும் டீ.வி.சேனலை குறை சொல்ல மாட்டார்கள்';குஜராத்தில் போய் 'மோதி' ப் பார் என்பதில் தொடங்கி;எனக்கு 'இடது வலது' பேதமில்லை என்று கமல் நைஸாக கம்யூனிஸத்தை நுழைப்பது வரை படம் முழுவதும் வரும் வசனங்கள் அருமை.முதலமைச்சருனுடைய வீட்டு 'கேட்டி'ல் தெரியும் 'உதய சூரியன்' சின்னம் முதற் கொண்டு,படத்தில் வரும் எல்லா காட்சிகளையுமே ஒவ்வொன்றாக பார்த்து செதுக்கியிருக்கிறார்கள்.

படம் முழுவதும் இழையோடும் நகைச்சுவை நன்றாகவே இருந்தாலும் கடைசி காட்சிகளில் ஏற்படவேண்டிய 'ஜீவன்' குறைவதற்கு அவையே ஒரு காரணமோ என்று தோன்றுகிறது,இருந்தாலும்,நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல 'த‌மிழ் படத்தை' பார்க்க வாய்ப்பளித்தற்கு கமலையும்,இயக்குனரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

உன்னை போல் ஒருவன்‍‍- 'தலைவன் இருக்கிறான்'

Friday, September 18, 2009

கம‌ல்-50(55)*




கமலைப் பற்றி ஏற்கெனவே எல்லோரும் எவ்வளவோ சொல்லிட்டாங்க.ஆனால் கமல்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் அவருடைய கடின உழைப்பு,விடா முயற்சி,மனம் தளராமை,புது புது விஷயங்களை கத்துக்கிறது மட்டுமில்லை.நாம எல்லோரும் அவர்கிட்ட கத்துக்கிறதுக்கு பல விஷயங்கள் இருந்தாலும்,ஒரு விஷயம் மட்டும் எல்லோருக்குமே பொருந்தும்னு தோணுது.

கமலுக்கு பிடிச்ச விஷயம்‍,தொழில்-நடிப்பு.அந்த நடிப்பில் தன்னை உயர்த்திக்கிறதுக்காக அதற்கு துணை நிற்கும் விஷயங்களான கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்,தயாரிப்பு மற்றும் சினிமாவில் வரும் புது புது Technologies எல்லாத்தையும் கத்துக்கிட்டாலும்,அவை எல்லாவற்றையும் தன்னுடைய நடிப்பை உயர்த்திக்கிறதுக்காக மட்டும்தான் பண்ணுவாரு.அதனால்தான் இப்பொழுதும் அவரால் புது புது வேடங்களை ஏற்று சிறப்பாக நடிக்க முடிகிறது.இப்ப இருக்கிற சில இயக்குனர்கள் மாதிரி,தனக்கு எது நன்றாக வருமோ அதை விட்டு விட்டு,நடிகனாகியே தீரனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு தங்களுடைய உண்மையான திறமையையும் இழப்பது போல் கமல் செய்வதில்லை.எல்லா விஷயங்களையும் படிப்படியாகத்தான் கத்துக்கிட்டார்.நூற்றி ஐம்பது படங்கள் நடித்த பின்புதான் தன் முதல் படத்தையே இயக்கினார்.அதற்கு முன்பு கூட சில படங்களுக்கு கதை,திரைக்கதை,வசனம்,தயாரிப்பு என்று ஆரம்பித்து கடைசியாகத்தான் தன்னுடைய படங்களை இயக்கவும் ஆரம்பித்தார்.இதெல்லாம் பண்றதாலதான் அவரால் இப்பொழுதும் நடிப்பில் நம்பர்-1 இடத்தில் இருக்க முடிகிறது.


நாம எந்த வேலை வேணும்னாலும் பண்ணலாம்.ஆனால் நாம பண்ற வேலையில் நம்பர்-1 ஆக இருக்க வேண்டுமெனில்,நம்மளுடைய வேலையை நன்றாக பண்ணுவதற்கு துணை நிற்கும் மற்ற விஷயங்களை தெரிந்து கொண்டாலே போதுமானது. நீங்க Developer-ஆக இருக்கலாம்.ஆனாலும் Testing கத்துக்கிறது உங்களை இன்னும் நல்ல Developer-ஆக உருவாக்கும். Tester-ஆக இருந்தால் Development பற்றி தெரிஞ்சுகிறது,உங்களை நல்ல Tester-ஆக உருவாக்கும்.நீங்க Development பற்றி தெரிஞ்சுக்கிட்ட‌துனால Field மாறனும்னும் அவசியம் இல்லை.கமல் மாதிரி,இருக்கிற துறையிலேயே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு King-ஆக இருக்கலாம்.

Saturday, September 12, 2009

ஈர‌ம்‍‍‍-விமர்சனம்


மனிதனுடைய வாழ்க்கையில் சந்தோஷம்,கோபம்,வலி,கவலை மாதிரி காதலும் ஒரு முறை ஒரே ஒருவரிடம் மட்டும் வரும் என்று கிடையாது என்ற அழகான கருத்தை சொல்லும் படம்தான் ஈரம்.

கல்யாணத்திற்கு முன்பு ஒருவனிடம் ஏற்பட்ட காதலால், கல்யாணத்திற்கு பின்பு சந்தேகப்படும் கணவனால் ஒரு பெண் படும் வேதனையை, பேயின் துணை கொண்டு சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் அறிவழகன். அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் பெண் இறந்து விட, அதை துப்பறிய வருகிறார் A.C.P ஆதி.அதன் பின் தொடர்ந்து அதே குடியிருப்பில் வசிக்கும் மேலும் சிலரும் இறந்து விட, அவையெல்லாம் தற்செயலான மரணங்களா? இல்லை கொல்லப்பட்டார்களா? என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதை முதல் பாதியில் நம்மை நிமிர வைத்தும், இரண்டாம் பாதியில் நெளிய வைத்தும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஆதி,சிந்து மேன‌னுக்கு இடையில் காலேஜில் ந‌ட‌க்கும் காத‌ல் காட்சிக‌ள் அனைத்தும் பின்ன‌ணியில் வ‌ரும் ம‌ழை போல‌ குளுமை.அவ‌ர்க‌ளை P.G ப‌டிப்ப‌துபோல் காட்டியிருந்திருக்க‌லாம்.காதலுக்கும்,நட்புக்கும் இடையில் இருக்கும் நூலிலை வித்தியாசத்தை நன்றாகக் காட்டியிருக்கிறார்கள்.ப‌ட‌த்தில் வ‌ரும் வ‌ச‌னங்க‌ள் ப‌ல‌ இடங்க‌ளில் நன்றாக‌ இருக்கிற‌து."ம‌ச்சான் அவ‌ளை உன‌க்குத் தெரியும்னு சொல்ல‌வேயில்லை;பொய்யெல்லாம் அப்ப‌ப்ப‌தான் சொல்லணும்".ப‌ட‌த்தின் ஒளிப்ப‌திவும்,இசையும் அருமை.

ஃப்ளாஷ்பேக் முடிந்த‌வுடனே,கொலையாளி யார் என்பது தெரிந்துவிடுவதால்,ப‌ட‌த்தையும் சீக்கிர‌ம் முடித்திருந்திருக்க‌லாம். பெண் புத்தி பின் புத்தி என்ப‌து தெரியும்,அதற்காக‌ பெண் பேயின் புத்தியுமா? ப‌ட‌த்தின் கிளைமாக்ஸில் நந்தா மூல‌ம்,பேய் செய்‌வ‌தை முன்னாடியே செய்திருக்க‌லாம்.

ஈர‌ம்‍-முதல் பாதி ம‌ட்டும்.

Wednesday, September 2, 2009

Top 10 Songs-August

இந்த மாதத்திலிருந்து தமிழில் எனக்குப் பிடித்த பத்து பாடல்களைப் பட்டியலிடலாம் என நினைக்கிறேன். பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே பாடல்களைக் கேட்க முடிவதால்,பெரும்பாலான பாடல்கள் மெலடிகளாக இருப்பது தவிர்க்க முடியாததாகிறது.எனக்கு சென்ற மாதத்தில் பிடித்த பத்து பாடல்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்,இதில் தரவரிசை ஏதுமில்லை.நல்ல பாடல்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.



1) ஆதவன்-அன்பே மனம்(Hasili Fisiliye)-‍இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0002003

2) கண்டேன் காதலை-நான் மொழி அறிந்தேன்-‍இசை:வித்யாசாகர்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001999

3) நினைத்தாலே இனிக்கும்-அழகாய் பூக்குதே‍-‍இசை:விஜய் அந்தோனி
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001994

4) ஈரம்-‍‍‍தரை இறங்கிய‍‍-‍இசை:தமன்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001997

5) அங்காடி தெரு‍‍‍‍‍‍‍‍-‍‍‍உன் பேரை சொல்லும்‍‍-இசை:G.V.பிரகாஷ்குமார்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001921

6) ஆயிர‌த்தில் ஒருவ‌ன்-மாலை நேர‌ம்-இசை:G.V.பிரகாஷ்குமார்
http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.11639/

7) யாதுமாகி-பார்த்ததும் கரைந்தேனடி-இசை:ஜேம்ஸ் வசந்தன்
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001988

8) அச்ச‌முண்டு அச்ச‌முண்டு-க‌ண்ணில் தாக‌ம்-இசை:கார்த்திக் ராஜா
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001923

9) திரு திரு துரு துரு-ஜில்லென வீசும்-இசை:மணிசர்மா
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001996

10) ஆறுமுக‌ம்-எந்தன் ராஜாதி-இசை:தேவா
http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001966

Tuesday, August 25, 2009

பிரிய‌ச‌கி-2


நான் தி.மு.க‌
நீ அ.தி.மு.க‌
உன் பெயருடன்
என் பெயரையும் சேர்த்துக் கொண்டதால்!

நீ சூடிக் கொண்ட மல்லிகைப் பூவால்
என்னோடு சேர்ந்து
மல்லிகைப் பூவும் கிறங்குகிறது!

நீ ஊதிக் கொடுத்த பலூனால்
நான் மிதக்கிறேன் வானில்!

என் ஐம்புலன்க‌ளும்
ஒருங்கே வேலை செய்வ‌து
என்னுட‌ன் நீ இருக்கையில்தான்!

நீ நெற்றியில்
க‌ட‌னாகக் கொடுத்த‌ முத்த‌ம்
வட்டி போட்டு
இதழ் வ‌ரை வ‌ந்து நிற்கிறது இப்போது!

Saturday, August 22, 2009

கந்தசாமி‍-விமர்சனம்


தமிழ் சினிமாவின் கறுப்பு‍‍-வெள்ளை படக் காலத்திலிருந்து எல்லா ஹுரோக்களும் பண்ணிய,கறுப்பு பணத்தை எடுத்து வெள்ளை மனம் கொண்டவர்களுக்கு கொடுத்து உதவும் ஹுரோ பற்றிய கதையை 'ஷங்கர்' பட முலாம் பூசி கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள் சுசி கணேசனும்,விக்ரமும்.சி.பி.ஐ ஆஃபிசரான விக்ரம்,கெட்டவர்களிடமிருந்து பணத்தை அபகரித்து,கஷ்டப்படும் மக்களுக்கு,கடவுள் கொடுப்பது போல் கொடுத்து உதவுகிறார்.'இடையில்' ஷ்ரெயாவுடன் மோதல்,காதல்,மெக்சிகோ என்று காதில் பூ சுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் ஒரே ஆறுதல் விக்ரம்.கொஞ்சம் வயசானது போல் தோன்றினாலும்,இந்தப் படத்தில் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.முழுப் படத்தையும் ஓரளவிற்காவது பார்க்கமுடிவது 'ஜென்டில்மேனா'க நடித்திருக்கும் விக்ரமால்தான்.கேமராமேனின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.குறிப்பாக ஸ்ரெயாவை 'காட்டும்' இடங்களில்.
வடிவேலு காமெடியும் வர வர விவேக் காமெடி போல் மொக்கையாகிக் கொண்டே வருகிறது.தெலுங்கு நடிக‌ர் கிருஷ்ணா எப்படி ஒன்பது வயதிலேயே சி.பி.ஐ-ல் சேர்ந்தார் என்று தெரியவில்லை.பிரபுவிற்கு யாராவது பிரமோஷன் கொடுத்தால் தேவலை.'சாமுராய்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட பின்னணி இசையை அதே போன்ற காட்சிகளுக்கு அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்திய தபால் துறையில் தேவையில்லாமல் ஏன் இவ்வளவு முழு நேர ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்ற நியாயமான கேள்வி(?) இப் படம் பார்க்கும்பொழுது எழுவதை தவிர்க்க முடியவில்லை.சுசி கணேசன் இந்தப் படம் ஆரம்பிக்கும் முன் 'படம் நன்றாக‌ வர வேண்டும்' என்று 'கந்த‌சாமிக்கு' ஒரு லெட்டர் எழுதி போட்டிருந்தால் நல்லது என்று தோன்றுகிறது.

கந்த(ல்)சாமி.

Friday, August 21, 2009

பிரிய‌ச‌கி-1


கோபப்ப‌டுகையில்
அழகாய் இருக்கிறாய் என்றதற்கு
கோபப்பட்டாய்!

எங்கே பார்த்து விடுவேனோ என்று
நீ சேலைத் தலைப்பை
சரி செய்யும் போதெல்லாம்
பார்க்காத குற்றவுணர்ச்சியில் நான்!

உன் இதழ் ரேகைகளைப்
பிரதியெடுக்க‌த் தொட‌ங்கிய‌தில்
என் ஆயுள் ரேகை அதிகமாகிவிட்டது!

நான் குளித்துவிட்டு வருகையில்
எனக்கான துண்டு
உன் அழகிய நீண்ட கூந்தல்தான்!

என் த‌லைமுதல் பாதம் வ‌ரை
ஒவ்வொரு நர‌ம்பாய் இழுத்து
அழகிய‌ கோல‌மிட்ட‌வ‌ள் நீ!

தலை சாய்த்து
உதடு சுழித்து
புருவம் உயர்த்தி
நான் ஏன்
உன் இரு கைகளையே
பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிறாய்
மார்புக்கு குறுக்கே
கைகளைக் கட்டிக்கொண்டு!.

Saturday, August 15, 2009

பிரிந்து பரிதவித்தல் (அ) பரிதவித்து பிரிதல்



1) தசரதனை விட்டு
அவன்
அத்தனை மனைவிகளும்
ஒரே நேரத்தில் பிரிந்தால்
அவனுக்கு ஏற்படும்
வலியை விட‌
நீ ஒருத்தி பிரிந்ததில்
எனக்கு ஏற்பட்ட வலி அதிகம்
என் எலும்பிலும்
உன் பிரிவின்
தழும்புகள் இன்று.


2) காலச் சிறையில்
ம‌ரணம்தான் விடுதலை
காதல் சிறையில்
விடுதலையே மரணம்.

Sunday, August 9, 2009

தொலைந்(த்)த கனவு...



பெருமழை பெய்து ஓய்ந்திருந்த‌
ஒரு பின்னிரவில்
ஆழ் மனப்பரப்பில் இருந்த‌
என் கனவுகள்
ஒவ்வொன்றாய் சேக‌ரித்து
புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒவ்வொரு க‌ன‌விலும் நீ
என்னுட‌ன் இருந்த‌ க‌ணங்க‌ள்
இதய‌ வெற்றிட‌த்தை
நிர‌ப்ப‌த் தொட‌ங்கிய‌ வேளையில்
க‌ழிவிர‌க்க‌ம் அதிக‌மாகி
என் க‌விதைக்கான‌
த‌லைப்பை எழுதத் தொட‌ங்கினேன்...

Sunday, August 2, 2009

தற்கொலைக்கான ஆயுதத்தை தீர்மானித்தல்


வாழ்க்கை சூன்யமாகிவிட்ட
ஒரு தருணத்தில்
தற்கொலைக்கான காரணங்கள் ஒவ்வொன்றாய்
பிரதியெடுக்கத் தொடங்கினேன்
கடைசி சிகரெட் ஒன்றை
புகைக்கலாம் என்று
நிலா காதலிக்கு
புகைகளால்
தூது அனுப்பிக் கொண்டிருந்த கணத்தில்
எதிர் வீட்டுப் பெண்
முற்றத்தில் அமர்ந்து
'டீ' குடிக்க ஆரம்பித்தாள்
இது அவளின்
கடைசி 'டீ' யாக இருக்குமோ என்று
அவளை பார்த்து சிரிக்கத் தொடங்கினேன்
சிகரெட் விரல்களை சுடத் தொடங்கியிருந்தது

Tuesday, July 28, 2009

CHAT LOVE...


உன் Keyboard-க்கும்; Mouse-க்கும்
Windows-க்கும்; Bill Gates-க்கும்
மற்றும் Install செய்யப்பட்டிருந்த
அத்தனை Software-களுக்கும் தெரிந்த
என் காதல்
உனக்கு மட்டும்
தெரியாமல் போனது ஏனோ?

Sunday, July 26, 2009

தொலைத்த‌தை தேடுத‌ல் (அ) கிடைத்த‌தை தொலைத்த‌ல்...



யாரும‌ற்ற சாலையில்
எதையோ தொலைத்துவிட்டு
எதையோ தேடிக்கொண்டிருந்தேன்...

நீயாக‌ வ‌ந்து
தொலைந்த‌தை தேடிக் கொடுத்துவிட்டு
தொலைந்து போனாய்

யாரும‌ற்ற சாலையில்
எதையோ தொலைத்துவிட்டு
எதையோ தேடிக்கொண்டிருக்கிறேன்...