Tuesday, September 7, 2010

க‌மல்ஹாச‌ன்-ஒரு அற்புத‌க் க‌லைஞன்


இந்தப் பதிவு கண்டிப்பாக நண்பர் கருந்தேள் எழுதிய பதிவிற்கு எதிர் பதிவு கிடையாது. அவருடைய பதிவுகளை,அவர் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே விரும்பி படித்து வருகிறேன். ஒவ்வொரு விசயத்தின் மீதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை இருக்கும்.இந்தப் பதிவில் கமலை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதற்கான‌ காரணங்களை மட்டுமே கூற விரும்புகிறேன்.

கமல் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் குற்றச்சாட்டு அவர் ஆங்கிலப்படங்கள் சிலவற்றை காப்பி அடித்து தமிழில் பெயர் வாங்கிக் கொண்டார் என்பது. நாம் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.கமல் ஆரம்ப‌த்திலிருந்து இப்போது வரை தன்னை நடிகனாக மட்டுமே முன்னிறுத்துபவர்.அதற்கப்புறம்தான் அவருடைய மற்ற பரிமாணங்கள்.
கமலின் ஆரம்பக் காலத்துப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு காலத்தில் அவரும் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு மசாலாப் படங்களிலேயே அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார்.தமிழ் சினிமாவின் மோசமான காலகட்டமது. அதற்கு முன் மகேந்திரன்,பாரதிராஜா,பாலசந்தர் என்று தொடர்ந்து நல்ல இயக்குனர்களையும் நல்ல சினிமாக்களையும் கொடுத்துக் கொண்டிருந்த தமிழ் சினிமா,தொடர்ந்து மசாலா படங்களையே கொடுத்துக் கொண்டிருந்தது. எப்போதாவது அத்திப்பூத்தாற்போல் நல்ல படங்கள் வந்திருக்கலாம்.அந்தக் காலகட்டத்தில் பல புதிய இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து பண்ண வேண்டிய மாற்றத்தை,வேறு வழியில்லாமல் நடிகரான கமல் பண்ண வேண்டியதாயிருந்தது.

வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வம் கொண்டிருந்த கமலுக்கு சரியான தீனி கிடைக்கவில்லை.அதனால்தான்,அவரே வித்தியாசமான படங்களைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்தார்.இருப‌த்தைந்து ஆண்டுக‌ளுக்கு முன் வ‌ந்த‌ சாதா‌ர‌ண காமெடி ப‌ட‌மாகிய‌ 'எல்லாமே இன்ப‌ மைய‌ம்' ப‌ட‌த்தில் க‌ம‌லின் உழைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ள‌லாம்.தன்னுடைய 100 வது படமான 'ராஜபார்வை' யைத் தானே தயாரித்து நடித்தார்.கமலினுடைய ஆசையெல்லாம் வெளி நாட்டில் நல்ல கதைகளோடு வரும் படங்களைப் போன்று தமிழிலும் நல்ல படங்கள் வர வேண்டுமென்பதே.இதில் இன்னொரு முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும்.கமல் ஏதோ வெளி நாட்டுப் படங்களை படங்களை மட்டுமே தமிழுக்கு கொண்டு வந்தார் என்றில்லை. மற்ற மொழிகளில் தனக்குப் பிடித்த படங்களான 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'சத்யா','உன்னால் முடியும் தம்பி','குருதிப்புனல்' முதற்கொண்டு 'உன்னைப்போல் ஒருவன்' வரை இங்கு கொண்டு வந்திருக்கிறார்.இந்தப் படங்களையெல்லாம் முடிந்த அளவிற்கு நன்றாகவும் கொடுத்திருக்கிறார்.(குருதிப்புனல் பார்த்துவிட்டு அதன் ஒரிஜினல் டைரக்டர் சொன்னது; "ஒரிஜினலை விடவும் நன்றாக எடுத்திருக்கிறீர்கள்" என்பதுதான்.இதில் கமல் ஏன் வெளிநாட்டுப் படங்களை தமிழ் படுத்தும்போது 'கிரெடிட்' கொடுக்கவில்லை என்பது மற்றொரு பிரச்சனை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான இயக்குனர்கள் வெளி நாட்டுப் படங்களைக் காப்பி அடித்து இங்கு படமெடுத்திருக்கிறார்கள்.அவர்களெல்லோரும் டைட்டில் கார்டில் ஒரிஜினல் படத்திற்கு 'கிரெடிட்' கொடுத்திருப்பது போலவும், கமல் மட்டுமே இதுவரை அதுபோல் செய்யாமல் இருப்பது போலவும் அவரை 'மட்டுமே' குறை சொல்வது ஏனென்று தெரியவில்லை. அப்படி திட்ட வேண்டுமென்றால் எல்லோரையும்தான் திட்ட வேண்டுமே தவிர கமலை மட்டுமே குறிப்பிட்டு திட்டுவது நன்றாக இருக்காது.(இதில் பொதுவாக காப்பி அடிப்பதைப் பற்றி இந்தியர்கள் யாருமே பெரிதாக கவலைப்படுவதில்லை என்பதுதான் உண்மை.நம்மில் எத்தனை பேர் வின்டோஸ் ஒரிஜினல் வெர்ஷனையோ,திருட்டு விசிடியில் படம் பார்க்காமலோ,MP3 பாடல்களைத் தரவிறக்கம் பண்ணாமலோ இருக்கிறோம்).

இன்னும் சொல்லவேண்டுமானால் இப்படி கமல் நடித்த பெரும்பாலான படங்கள் அவருடைய தயாரிப்பிலோ,இயக்கத்திலோ வ‌ந்த‌வை கிடையாது.க‌ம‌ல் என்ன‌வோ அந்த‌ மாதிரி ப‌ட‌ங்களில் ம‌ட்டுமே ந‌டித்து பெய‌ர் வாங்கிய‌து போல் சில‌ர் சொல்வ‌து ஒப்புக் கொள்ள முடியாது.க‌ம‌ல் த‌ன‌க்குக் கதை பிடித்திருக்கும் பட்சத்தில் அந்த ப‌ட‌ங்கள் எந்த‌ மொழியிலிருந்தாலும் த‌ய‌ங்காம‌ல் ந‌டித்து வ‌ந்தார். அத‌னால்தான் புஷ்பக்,கோகிலா(க‌ன்னட‌ம்),ச‌ல‌ங்கை ஒலி,சிப்பிக்குள் முத்து(தெலுங்கு),ஏக் துஜே கேலியே(இந்தி) என்று அவ‌ரால் எல்லா மொழிக‌ளிலும் நல்ல ப‌ட‌ங்க‌ளைக் கொடுக்க முடிந்த‌து. மேலும்,த‌மிழ்,தெலுங்கு,க‌ன்ன‌ட‌ம்,ம‌லையாளம்,இந்தி என்று அனைத்து மொழிக‌ளிலும் நேர‌டிப்ப‌ட‌ங்க‌ளில் ந‌டித்து பல ஹிட் படங்களைக் கொடுத்த இந்திய ந‌டிக‌ர் கமல் ஒருவர்‌‌ ம‌ட்டும்தான் என்பது மறக்க முடியாத உண்மை.

தமிழ் சினிமாவிற்கு கமல் செய்த மிக நல்ல விசயம் என்னவென்றால், வித்தியாசமான படங்களைத் தொடர்ந்து தந்து கொண்டிருந்ததுதான். மற்ற மொழிகளிலெல்லாம் இப்போதிருக்கும் இளம் நடிகர்கள் கொஞ்சம் நன்றாக நடித்தால் கூட தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். இங்கே விக்ரம்,சூர்யா போன்ற நடிகர்கள், நல்ல நடிகர்கள் என்று பெயர் வாங்குவதற்கு மிகக் கடுமையான உழைப்பைக் கொடுக்க வேண்டியதிருக்கிறது.அதற்குக் காரணம், கமல் தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஏற்படுத்தி வைத்திருக்கிற Standard தான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் அமிதாப்பின் நடிப்பை 'பா' படத்தில் எல்லா வட இந்தியப் பத்திரிக்கைகளும் புகழ்ந்து எழுதியிருந்தன. இதேபோல் வேறு ஒரு நடிகர் நடித்து,தமிழில் வந்திருந்தால் மக்கள் என்ன சொல்வார்கள்,கமல்தான் இதே மாதிரி ஏற்கெனவே பண்ணியிருக்கிறாரே என்று சாதாரணமாக நினைப்பார்கள்.(அதற்காக நான் அமிதாப்பின் உழைப்பைக் குறை கூறுகிறேன் என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம்). அதுதான் கமலின் வெற்றி. அதனால்தான் இங்கே உள்ள நடிகர்கள் மிகுந்த உழைப்பைக் கொடுத்து வித்தியாசமான வேடங்களில் நடித்துப் பேர் வாங்குவதற்கான ஆரம்ப சுழி கமலிடமிருந்தே ஆரம்பமாகியது என்று கூறுகிறேன்(கமலுக்கு இதே போல் ஆதர்சனமாக விளங்கியவர் சிவாஜி கணேசன்).

கமல் காப்பி அடித்த படங்களை எல்லாம் ஒரு உதாரணத்திற்காக தமிழ் சினிமாவிலிருந்து நீக்கி விடுங்கள்.நமக்கு பல நல்ல படங்கள் கிடைத்திருக்காது;அது மட்டும்தான் உண்மை.விஜய் டிவி அவார்ட்ஸ்ஸில் பாலா பேசியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. "நான் கடவுள் படம் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஸனே அன்பே சிவம்' தான் என்றார். ஒரு வேளை கமல் அன்பே சிவம் போல் ஒரு படம் எடுக்காமல் இருந்திருந்தால் 'நான் கடவுள்' போன்ற ஒரு நல்ல படம் நமக்கு கிடைக்காமலே போயிருந்திருக்கும்.இதில் சில வெளிநாட்டுப் படங்களை இன்ஸ்பிரேஸனாக வைத்துக்கொண்டு கமல் எடுத்த படங்களையெல்லாம் அப்பட்டமான காப்பி என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படிப்பார்த்தால் பருத்தி வீரனையே,விருமாண்டியின் காப்பி என்று சொல்லி விடலாம்-அது கொஞ்சம் கூட உண்மையில்லை என்றாலும் கூட‌(இரு படங்களும் மதுரை மண் சார்ந்தவை,ஹீரோ ஊதாரித்தனமாகத் திரிவது,காதல் வயப்பட்டவுடன் திருந்தி நல்ல வாழ்க்கை வாழ நினைப்பது,காதலி கற்பழிக்கப்பட்டு இறப்பது).ஆனால் கமல் பருத்திவீரனுக்காக அமீரைப் பாராட்டித் தள்ளினார். கமல் படங்களைப் பார்த்து விட்டு, பல இளம் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் உத்வேகமாக படமெடுக்க ஆரம்பித்தார்கள் என்பதுதான் உண்மை.

க‌ம‌ல் வேறு மொழி ப‌ட‌ங்களைக் காப்பி அடித்து த‌மிழில் எடுத்த‌ பெரும்பாலான ப‌ட‌ங்க‌ள் அவ‌ருக்கு தோல்வியை ம‌ட்டுமே கொடுத்திருக்கின்ற‌‌ன‌‌.அவ‌ர் நினைத்திருந்தால் ச‌க‌ல‌க‌லா வ‌ல்ல‌வ‌ன் போன்ற‌ ப‌ட‌ங்க‌ளில் தொட‌ர்ந்து ந‌டித்து காசு ஈட்டியிருக்க முடியும். ஆனால் சினிமாவில் உள்ள காத‌லால்தான் வித்தியாச‌மான ப‌ட‌ங்களைத் தொட‌ர்ந்து கொடுக்க வேண்டுமென்று நினைத்து,அவரால் அதில் ஓரளவிற்கு வெற்றியும் பெற முடிந்திருக்கிறது.ந‌ன்றாக‌ நினைத்துப் பாருங்கள், ஒரு ந‌ல்ல‌ ப‌ட‌த்தை தேர்வு செய்து,க‌ஷ்ட‌ப்ப‌ட்டு அந்த‌ ப‌ட‌த்திற்காக‌ உழைத்து, ப‌ட‌மும் ந‌ன்றாக‌ வந்திருந்து ஃபிளாப் ஆவ‌து போல் கொடுமையான‌ விச‌ய‌ம் வேறு எதுவும் இருக்க‌ முடியாது. ஒரு த‌ட‌வை ஃபிளாப் ஆகிற‌தென்றால் பர‌வாயில்லை. ஆனால் தொட‌ர்ந்து தோல்வியடைந்தாலும்,தன்னுடைய முயற்சியில் சற்றும் தளராத விக்கிர‌மாதித்ய‌ன் போல் இருந்த ந‌டிக‌ர்க‌ள் இந்திய‌ சினிமாவில் மிக மிக‌ குறைவு.

க‌மலை ம‌ற்றொரு விச‌ய‌த்தில் எல்லோரும் குறை கூறும் விச‌ய‌ம் அவ‌ருடைய‌ 'உல‌க‌ நாய‌க‌ன்' ப‌ட்ட‌ம். அப்ப‌டிப் பார்த்தால் த‌மிழில் ப‌ட்ட‌ம் போட்டுக் கொண்டிருக்கும் எல்லா ந‌டிக‌ர்களையும் குறை கூற‌ வேண்டிய‌திருக்கும்.இதில் கமலை மட்டும் குறை கூறுவது ஏனோ?.க‌ம‌லுக்கும், இந்தியாவில் உள்ள‌ ம‌ற்ற‌ ந‌டிக‌ர்க‌ளுக்கும் உள்ள வித்தியாச‌ம் என்ன‌வென்றால்,மற்றவ‌‌ர்க‌ள் ந‌டித்த‌ எந்த‌ வேட‌த்தை வேண்டுமானாலும் க‌ம‌லால் ஓர‌ளவிற்கு ந‌டிக்க‌ முடியும். ஆனால் கம‌ல் ந‌டித்த‌ அனைத்து வேட‌ங்களையும்,இந்தியாவில் வேறு ஏதாவ‌து ஒரே ந‌டிக‌ர் ந‌டிப்ப‌து இயலாத‌ விச‌ய‌ம். ஏனைன்றால் க‌ம‌ல் வெறும‌னே ஒரு ந‌ல்ல‌ ந‌டிக‌ன் ம‌ட்டும‌ல்ல‌,க‌தை,திரைக்க‌தை,வச‌ன‌ம்,இயக்க‌ம்,த‌யாரிப்பு,ந‌ட‌ன‌ம்,பாட‌ல் எழுவ‌து,பாடுவ‌து,ச‌ண்டை காட்சிக‌ளில் ரிஸ்க் எடுத்து ந‌டிப்பது என்று பல விசயங்களையும் பண்ணிக் கொண்டிருப்பவர். உல‌க‌த்திலேயே வேறு ஏதாவ‌து ந‌டிக‌ர் இத்த‌னை திறமைக‌ளோடு இருப்ப‌தாக‌த் தெரிந்தால் பின்னூட்ட‌மிடுங்க‌ள்(டி.ராஜேந்த‌ர் என்று கூறுபவ‌‌ர்க‌ள் சொர்க்க‌த்திற்குப் போக‌க் க‌ட‌வ‌து).வேறு மொழிகளில் இந்த நடிக‌ரின் காமெடி படங்கள் நன்றாக இருக்கும்(அந்த நடிகருக்கு நடனம் வராமல் இருக்கும் என்பது வேறு விசயம்);மற்றொரு நடிக‌ரின் ஆக் ஷன் படங்கள் நன்றாக இருக்கும்; இந்த நடிகரின் நடிப்பு நன்றாக இருக்கும் என்று வேண்டுமானாலும் கூற முடியும்.ஆனால் ஒரே நடிகர் மேலே குறிப்பிட்ட அனைத்து விதமான வேடங்களிலும் தொடர்ந்து பரிணமிப்பதுதான் கமலின் தனித்துவம்.கமல் நடித்த சிறந்த படங்களான "விருமாண்டி,அன்பே சிவம்,ஹேராம்,மகாநதி,தேவர் மகன்,மைக்கேல் மதன காமராஜன்,அபூர்வ சகோதரர்கள்,பேசும் படம்,நாயகன்,மூன்றாம் பிறை,மரோ சரித்ரா,சலங்கை ஒலி,16 வயதினிலே...என்று பல படங்கள் இருக்கையில் சில படங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் காப்பி அடித்து பெரும் புகழையும் இடத்தையும் அடைந்து விட்டார் என்பது ஒத்துக்கொள்ள முடியாதது.அப்படி என்ன பெரிய இடத்தை நாம் அவருக்கு கொடுத்துவிட்டோம்;அவரிடம் இருந்து பிடுங்கிக் கொள்வதற்கு.50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவை மூச்சாகக் கொண்டு பல சிறப்பான படங்களில் நடித்திருந்தாலும்,தமிழ்நாட்டில் கமலுக்கு இப்போதும் இரண்டாவது இடம்தான்.(கமல் 50 ஆண்டு விழாவில் ரஜினியே ஆச்சரியப்பட்டு சொன்னது,"வட இந்திய நடிகர்களெல்லாம் இப்போது வரை ஆச்சரியப்படும் விசயம்,கமல் இருக்கையில் நான் எப்படி நம்பர் 1 என்பதுதான்"-அப்படி பொது மேடையில் ரஜினி சொன்னது,அவரின் பெருந்தன்மை என்பது வேறு விசயம்)

கமல் புது இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை என்று குறைப்பட்டுக் கொள்கிறார்கள். இப்போதிருக்கும் மற்ற முன்னணி நடிகர்களை ஒப்பிடும்போது கமல் அதிகமான இயக்குனர்களுடன் வேலை செய்திருக்கிறார்.ஷங்கர்,கவுதம் மேனன் போன்றோருக்கு கமலின் படங்கள் அவர்களுடைய மூன்றாவது படம்தான்.சுரேஷ் கிருஷ்ணாவிற்கு வாய்ப்புக் கொடுத்ததில் இருந்து சரண்,சுந்தர்.c,உன்னைப்போல் ஒருவன் இயக்குனர் என்று பல இன்றைய இயக்குனர்களுடன் பணிபுரிந்திருக்கின்றார். மிஷ்கினோடு கூட படம் செய்வதுதாக இருந்தது வேறு விசயம்.கமலுடன் பணியாற்றிய பல இயக்குனர்களுக்கும் அவர்களின் இயக்கத்தில் சிறந்த படமாக இன்றும் சொல்லப்படுவது கமலுடன் அவர்கள் சேர்ந்து பண்ணிய படங்கள்தான்.

க‌ம‌லின் மீது வைக்க‌ப்ப‌டும் மற்றொரு குற்ற‌ச்சாட்டு அவ‌ரின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையில் இரு முறை ம‌ணமுடித்து விவாகரத்து ஆனது.ஒரு க‌ணவன்,ம‌னைவி இருவ‌ரும் ம‌ன‌முவ‌ந்து ச‌ட்ட‌த்திற்கு உட்ப‌ட்டு விவாக‌ர‌த்து செய்வ‌தில் என்ன‌ பெரிய‌ த‌ப்பு இருக்க முடியும்,அதையும் விட இது அவர்களின் தனிப்பட்ட விசயமும் கூட.ம‌ற்றொன்று அவ‌ருடைய திருமண வாழ்க்கையைத்தான் எல்லோரும் பெரிய‌ குறையாக‌ சொல்கிறார்க‌ளே தவிர, அவரிட‌ம் உள்ள பல ந‌ல்ல‌ விச‌ய‌ங்க‌ளான‌ அர‌சிய‌லுக்கு வ‌ர‌மாட்டேன் என்று சொல்லி இப்பொது வ‌ரை த‌ன் பேச்சைக் காப்பாத்துவ‌து,த‌ன்னுடைய‌ ர‌சிக‌ர் ம‌ன்ற‌ங்க‌ளையெல்லாம் முதல் ஆளாக‌ ந‌ற்பணி ம‌ன்ற‌ங்க‌ளாக‌ மாற்றிய‌து,சினிமாவில் ச‌ம்பாதித்த‌ காசை சினிமாவிலேயே முத‌லீடு பண்ணுவ‌து,த‌ன்னுடைய‌ உட‌லையே தான‌மாக‌க் கொடுத்த‌து,காட்சிக்கு தேவைப்ப‌டாத‌வ‌ரை த‌ண்ணி,சிகரெட் அடிப்ப‌து போன்று த‌ன்னுடைய‌ ப‌ட‌ங்க‌ளில் நடிக்காமல் இருப்பது,முடிந்த வரை தூய தமிழிலேயே பேசுவது போன்றவற்றைப் பற்றி வாயே திறப்பதில்லை.

க‌டைசியாக‌,குறைக‌ள் இல்லாத ம‌னித‌ன் யாரும் கிடையாது. ஆனால் ஒருவ‌ரிட‌ம் உள்ள‌ சில‌ குறைக‌ளை ம‌ட்டும் மிகைப்ப‌டுத்தி,அவ‌ர் இத்த‌னை ஆண்டுகளாக‌ ப‌ண்ணிய‌ சாத‌னைக‌ளை மூடி‌ ம‌றைக்க‌ நினைப்ப‌து,ஒரு உண்மையான‌ க‌லைஞனுக்கு நாம் கொடுக்க‌ நினைக்கும் ம‌ரியாதையாக‌ இருக்க‌ முடியாது.

77 comments:

  1. குறைக‌ள் இல்லாத ம‌னித‌ன் யாரும் கிடையாது. ஆனால் ஒருவ‌ரிட‌ம் உள்ள‌ சில‌ குறைக‌ளை ம‌ட்டும் மிகைப்ப‌டுத்தி,அவ‌ர் இத்த‌னை ஆண்டுகளாக‌ ப‌ண்ணிய‌ சாத‌னைக‌ளை மூடி‌ ம‌றைக்க‌ நினைப்ப‌து,ஒரு உண்மையான‌ க‌லைஞனுக்கு நாம் கொடுக்க‌ நினைக்கும் ம‌ரியாதையாக‌ இருக்க‌ முடியாது.
    //

    FULLY AGREE

    ReplyDelete
  2. EXCELLENT ARTICLE MOHAN...


    I LOVE KAMAL...


    MANO

    ReplyDelete
  3. வழ..வழ என்று கம்மியான சரக்கோடு எழுதி இருக்கிறிர்கள்.”நம்மில் எத்தனை பேர் வின்டோஸ் ஒரிஜினல் வெர்ஷனையோ,திருட்டு விசிடியில் படம் பார்க்காமலோ,MP3 பாடல்களைத் தரவிறக்கம் பண்ணாமலோ இருக்கிறோம்” தனி நபருக்கு வேண்டுமானல் பொருந்தும். ஒரு கம்பெனி என்று வந்தால் ஒரிஜினல் தானே தலைவா? இதையல்லாம் கமலே இன்ஸ்பிரேசன் என்று கூட சொல்லி இருந்தால்.. கருந்தேள் புட்டு புட்டு வைக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. கமலின் சீரியசான சில படங்கள் கூட காப்பி என்பது கவலைக்குரிய விஷயமே.மற்றபடி கமலுடம் கொஞ்சம் பழகியதில் சொல்கிறேன் அவரை போல் சினிமாவை நேசிப்பவரை பார்த்ததில்லை.

    ReplyDelete
  4. மோகன்,

    உங்கள் பதிவு படித்தேன். என்னுடைய கருத்தை மதியம் இங்கு பின்னூட்டமாக இடுகிறேன்.

    ReplyDelete
  5. @ பிரியமுடன் பிரபு!

    வருகைக்கு நன்றி பிரபு!

    ReplyDelete
  6. @ MANO!

    நன்றி மனோ!

    ReplyDelete
  7. @ Rafeek!

    மனதில் தோன்றியதை எல்லாம் எழுதியதால் கொஞ்சம் 'வழ வழ' என்று வந்து விட்டது என்று நினைக்கிறேன். நான் சொல்ல வந்ததே மற்றவர்கள் எல்லாம் காப்பி அடித்து,அதை வெளியில் சொல்லுவது போலவும்,கமல் மட்டுமே மறைப்பது போலவும்,அவரை மட்டுமே இந்த விசயத்தில் 'குறி' வைப்பது ஏன் என்பது மட்டுமே!

    கருத்துக்கு நன்றிங்க!

    ReplyDelete
  8. @ கருந்தேள் கண்ணாயிரம்!

    வாங்க கருந்தேள்!

    உங்கள் கருத்துக்காக ஆவலுடன்!

    ReplyDelete
  9. raju:kamalji is great luckily he didnt do enthiran too artificial.

    ReplyDelete
  10. Some of his movies are good no doubt

    ReplyDelete
  11. //கமல் மட்டுமே இதுவரை அதுபோல் செய்யாமல் இருப்பது போலவும் அவரை 'மட்டுமே' குறை சொல்வது ஏனென்று தெரியவில்லை. அப்படி திட்ட வேண்டுமென்றால் எல்லோரையும்தான் திட்ட வேண்டுமே தவிர கமலை மட்டுமே குறிப்பிட்டு திட்டுவது நன்றாக இருக்காது//

    வெல். அத்தனைபேரையும் திட்ட வேண்டும் என்பது சரி. ஆனால், அது எப்படி வெட்கமே இல்லாமல், அறிவுஜீவி போல் நடித்து, ஏதோ இந்தப் படங்கள் எல்லாமே கலைச்சேவை செய்வதற்கு மட்டுமே தான் சொந்தமாக எடுத்ததாக ஜம்பம் அடிக்க வேண்டும் என்பதே என் எளிமையான கேள்வி. விஜய், பேரரசு, ராம நாராயணன், கௌதம், வஸந்த் இன்னபிற காப்பி இயக்குநர்கள் எல்லாம், கமலைப்போல் ‘அய்யய்யோ... என் படத்துக்கு ஆஸ்கர் இல்லை... அடைந்தே தீருவேன்.. அய்யய்யோ’ என்று ஓலமிடவில்லை. ஏனெனில், அவர்களுக்கே இந்த உண்மை - தாங்கள் காப்பியடிப்பது - தெரியும். ஆனால், இந்தக் கமல் விடும் அலம்பல்கள் இருக்கிறதே - டோட்டல் Nonsense ! அதுவும், ஆங்கிலப்படங்களை காப்பியடித்து, அவர்களுக்கே அனுப்பும் மேட்டரை எப்படிச் சொல்வீர்கள்? மட்டுமல்லாமல், வெட்கமே இல்லாமல் இவர் கொடுக்கும் பேட்டிகள் - தமிழ் சினிமாவைக் கரையேற்ற வந்ததே தாந்தான் ரகத்தில் இருப்பவை - இவற்றைக் கேட்டால், சிரிப்புதான் வருகிறது.

    எனது கேள்விகள் மிக எளிமையானவை.

    1. கமல் அட்டைக்காப்பி அடித்தது உண்மை. அதனைச் செய்துவிட்டு, ஏன் இந்த நடிப்பு?

    2. கமலின் நடிப்பு தான் பிரமாதம் என்றெல்லாம் ஒரு மாயை ஏற்பட்டுவிட்டது. இந்த உயரத்தில் இருக்கக்கூடிய ஆள், இந்தச் சின்னத்தனமான காரியத்தை ஏன் செய்ய வேண்டும்?

    3. அப்படிக் காப்பியடித்தால், humbleness என்று சொல்வார்கள் - அப்படி இருக்க வேண்டியதுதானே? எதற்கு இந்த சலம்பல்கள்? தனது படங்களின் திருட்டு விசிடிக்கள் வந்ததையடுத்து, பெரிய நியாயவான் போல் புலம்பினாரே.. இவர் ஈயடிச்சாங்காப்பி அடித்த படங்கள் மட்டும் என்ன பாவம் செய்தன?

    மற்றபடி, கமல் நடிப்புக் கடவுள், அவர் தான் ‘ஒலகநாயகன்’ போன்ற பொய்மையான மாயைகளை நான் நம்புவதில்லை நண்பா.. அவர் அதிலும் காப்பி மன்னன்.. டஸ்டின் ஹாஃப்மேன் என்று ஒரு ஹாலிவுட் நடிகர்.. அவரது நடிப்பை இம்மியளவும் பிசகாமல் பிரதியெடுப்பதில் கமல் கில்லாடி. என்னைப் பொறுத்த வரை, காப்பியடித்தே பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு கிரிமினல் அவர். அவ்வளவே. நன்றி.

    ReplyDelete
  12. கமல் ஒரு பொய்யான அறிவுஜீவி.. வேடமிட்டவர் என்பது என் கருத்து.. சுய வாழ்வியல் அனுபவம் சார்ந்த எந்த படமும் அவரால் எடுக்கவும் முடியாது.. ஏனென்றால் அவருக்கு நிதர்சன வாழ்வியல் இல்லவே இல்லை.. குறைந்தபட்சம் அப்படி உள்ளவர்களை மதிக்கும் பண்பும், அதைபயன்படுத்தி கொண்ட நல்ல பார்வையும் சுத்தமாக இல்லை... வடிவேல் எனும் நடிகரிடம் ஒப்பிட்டால் கூட பாவம் என்றுதான் சொல்வேன்.. அவர் சினிமா நடிப்பை நடிக்கதொடங்கியதே பாலுமகேந்திராவின் கோகிலா எனும் படத்திலிருந்துதான்.. பின்பு... முன்றாம் பிறை.. அவரது நடிப்பின் ஒப்பீட்டை காணவேண்டுமெனில்.. நீங்கள் தில்லுமுல்லு.. பாருங்கள்..ரஜினியின் அநாயசமான நடிப்பும்..(நான் ரஜினி ரசிகன் அல்ல) கமலின் எடுபடாத நகைச்சுவையும்..யாரையும் அவர் மனம் திறந்து பாராட்டி நீங்கள் கேட்டதுண்டா.. அப்படி பாராட்டுவது போல் பேசுவார்..ஆனால் நிறைய சூட்சமமாக இருக்கும்...மற்றபடி அவர் பாவம் அவருக்கு தெரியும்.. காதல்...பசங்க, போன்று ஒரு படத்தைக்கூட அவரது வாழ்நாளில் அவரால் தரமுடியாது என்று.. 30 வருடம் இந்த துறையில் இருக்கிறார்.. கருணாநிதி போல ஆனால் அவரிடம் உள்ள குறைந்தபட்ச அனுபவம் கூட இவரிடமில்லை.. ஏனென்றால் ஒரு நடிகன் நீண்ட காலம் வெற்று புகழில் வாழும்போது அனுபவங்களை திரட்டுவது.. சாத்தியமில்லை.

    ReplyDelete
  13. apple computers invented graphical user interface microsoft copied that and won the lawsuit against apple,copied and won the lawsuit also,GUI i am using this system means i am grateful to apple,u r using microsoft the greatest criminal in mankind winning lawsuits if u say kamal the criminal,better twentieth century fox and warner brothers come here and open an office and put lawsuit on indian films no one can copy english films or battle is left to lawsuits not in intellectals like charunivedha and karundhel,so far never did that,மற்றபடி, கமல் நடிப்புக் கடவுள், அவர் தான் ‘ஒலகநாயகன்’ போன்ற பொய்மையான மாயைகளை நான் நம்புவதில்லை நண்பா.. அவர் அதிலும் காப்பி மன்னன்.. டஸ்டின் ஹாஃப்மேன் என்று ஒரு ஹாலிவுட் நடிகர்.. அவரது நடிப்பை இம்மியளவும் பிசகாமல் பிரதியெடுப்பதில் கமல் கில்லாடி. என்னைப் பொறுத்த வரை, காப்பியடித்தே பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கும் ஒரு கிரிமினல் அவர். அவ்வளவே. நன்றி.
    September 8, 2010 1:10 AM கமலை குற்றவாளி கூண்டில் ஏற்றும் முன்னர் முன்னபாய் producer டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி ஆகியோரை எப்போது கூண்டில் ஏற்றுவது என் சினிமா நண்பர் சொன்னது patch adams பட்ச அடம்ஸ் என்ற இங்கிலீஷ் பிலிம் முன்னபாய் என்ற பெயரிலும் வசூல் ராஜா ஷங்கர் dada m b bs telugu உபேந்திரா m b b s kannada என்று அணைத்து இந்திய மொழிகளில் எடுத்து சம்பாரித்த பணம் பல பல கோடிகள் ஹாலிவுட் கம்பெனி கோட்டை விட்டது.நீங்க blogsuit போட்டாச்சு எப்போ lawsuit courts copyright acts ,let the lawsuit decide,till then enjoy ulaga nayaganin tamil version or desi version of hollywood films.

    ReplyDelete
  14. @ கருந்தேள்!

    கமல் நடித்த இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில், உங்கள் எண்ணிக்கைப்படி பார்த்தால் கூட,அதிகபட்சம் 20 படங்கள் காப்பி அடித்த படங்களாக இருக்கக் கூடும்.அப்படி காப்பி அடிக்காமல் நடித்த‌ படங்கள் எதுவும் நன்றாக இருந்ததில்லையா? அந்த எண்ணிக்கை கண்டிப்பாக கமல் காப்பி அடித்து நடித்ததாக சொல்லப்படும் படங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்காதா?.குறைந்தபட்சம் அந்த படங்களுக்காக கமலைப் பாராட்டுவதில் என்ன தவறு.கமல் சிறந்த நடிகரா இல்லையா என்பது ஒருபக்கம் இருக்கட்டும்.கமலை விட இவர் சிறந்தவர் என்று இப்போதைய தமிழ் சினிமாவிலோ அல்லது இந்திய சினிமாவிலோ நீங்கள் முன்னிறுத்தும் ஆட்கள் யார்?.அப்படி தமிழ் சினிமாவில் வேறு யாராவது இருந்து,இதோ பாருங்கள் "கமலை விட சிறந்த கலைஞன் இவன் இருக்கிறான்;அவன் பின் போகாமல் நீங்களெல்லோரும் ஏன் கமல் பின் போகிறீர்கள்?" என்று கேட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும்.

    //விஜய், பேரரசு, ராம நாராயணன், கௌதம், வஸந்த் இன்னபிற காப்பி இயக்குநர்கள்//

    நான் கமலை நல்ல நடிகனாக மட்டுமே பார்க்கிறேன். அவரை ஒன்றும் சிறந்த இயக்குனர் என்று எங்கேயும் கூறியதில்லை. அதனால் கமலை மேலே உள்ளவர்களுடன் ஒப்பிடுவதே தேவையில்லாதது.


    //டஸ்டின் ஹாஃப்மேன் என்று ஒரு ஹாலிவுட் நடிகர்..அவரது நடிப்பை இம்மியளவும் பிசகாமல் பிரதியெடுப்பதில்//

    நடிப்பு என்பதே மற்றொன்றை பிரதியெடுப்பதுதானே நண்பா.கமல் தன்னுடைய எல்லா படங்களிலும் டஸ்டின் ஹாஃப்மேன் நடிப்பைக் கண்டிப்பாகப் பிரதியெடுத்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  15. ஆப்பிள் நிறுவனம் பெருந்தன்மையான பதில் என்ன தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் நம் கண்டிபிடிப்பை உபகோயாக படித்தினாலும் அந்த கிராபிகல் உசெர் இண்டர்பாசே நாம் கண்டிபதது தானே மக்களை சென்று சேர்ந்தது என்று சந்தோஷத்தில் சொன்னது ,ஹாலிவுட் கம்பெனி கூட கமல் படம் பார்த்தால் இந்த மாதிரி சொல்ல கூடும்,இதனால் சாருவிற்கும் கருந்தேளுக்கும் ஏன் வேகிறது ,தேள் என்றல் கொட்டி தான் அக வேண்டுமா ,ஆபத்து வரும் பொது தானே கொட்ட வேண்டும் ,யாரை பார்த்தாலும் ஏன் கொட்ட வேண்டும் விஷத்தை

    ReplyDelete
  16. @ Anonymous!

    நான் சொல்லவரும் விசயம் ஒன்றே ஒன்றுதான்.கமல் ஒரு நல்ல நடிகன்,மேலும் சினிமாவில் உள்ள அத்தனை விசயங்களும் ஓரளவிற்குத் தெரிந்த கலைஞன்.அவரை ஒரு போதும் மிகச் சிறந்த‌ படைப்பாளியாக நான் முன்னிறுத்தவில்லை.அவரை விட நல்ல இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசை;அப்படிப்பட்ட படங்களில் அவரை நடிக்க வைப்பது தமிழ் இயக்குனர்களின் கைகளில்தான் உள்ளது

    ReplyDelete
  17. star plus tv channel ignored regional markets of southern region so sun tv took advantage c the political power and the market and market valuation of sun,similarly hollywood ignored all indian language market they can make the story and sell english film to india and negotiate with indian film makers for a remake in indian langauages for a reasonable price.அதிகார பூர்வமாக ஆங்கில படங்களை ரீமேக் rights வாங்கி எடுக்கும் களம் வெகு தூரம் இல்லை

    ReplyDelete
  18. கமலை பற்றி அவதூறாக பேசிய சாரு தப்பித்து கொண்டார் ,ரஜினி போல repeat audience பிசினஸ் கமலுக்கு மிகவும் குறைவு அதனால் கமல் ரசிகர்கள் டைம் வேஸ்ட் பண்ண மாட்டாங்க ,ஆனால் நுனாலும் தன வாயால் கெடும் என்பதை போல சாரு அவர்கள் நித்யானந்தா விசையம் மூலம் மாட்டி கொண்டார் ,அது போல தான் கருந்தேளும் மாட்டி கொள்ள போகிறார் ,காலம் தான் பதில் சொல்லும்

    ReplyDelete
  19. கமல் காபி அடிக்காவிட்டால் என்ன வேறு யாரும் ஹாலிவுட் படங்கள் காபி அடிப்பது இல்லையா ,மகளிர் மட்டும் 9 to 5 காபி ,மகளிர் மட்டும் ஹிந்தி ரீமேக் லேடீஸ் ஒன்லி ladies only படம் எடுத்து வெளியிட வில்லை கமல்,அதில் தமிழில் நாகேஷ் தேஅது போடி dead body ரோல் கமல் ஹிந்தியில் பண்ணி இர்ருந்தார் ,இப்போ ஹிந்தி மகளிர் மட்டும் ஹலோ டார்லிங் என்ற பெர்யரில் வெளி ஆகி உள்ளது பாஸ் வித் ௩ ச்டப்ப்ஸ் boss with 3 staffs .பார்த்து சொல்லுங்க,criminal charges podunga hello darling producers director actor mela karundhel

    ReplyDelete
  20. உங்கள் பதிவில் உள்ள பெரும்பாலான கருத்துகளில் உடன்படுகிறேன்.

    நாளை என்னிடமிருந்தும் ஒரு பதிவை எதிர்பாருங்கள்.

    காப்பியடித்தாலும், இம்மண்ணின் வாசனையோடு எடுத்ததே பெரிய விசயம் தான்.

    80 வருட சினிமா வரலாறில் ஒருவரையும் காப்பியடிக்கமலோ, சாயல் தெரியாமல் நடிப்பதோ சாத்தியமில்லாத ஒன்று.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. அவரது பதிவை பார்த்து மனம் மிகவும் வருந்தியது. உங்கள் பதிவு மருந்திட்டது.
    கமல் போன்ற கலைஞனை புரிந்து கொள்வது கடினம். இவர் போன்றவர்களுக்கு இன்னும் கடினம்.
    அவரது தவறுகளை சுட்டி காட்ட இவ்வளவு முயன்ற இவர் அவரது சாதனைகளை வேண்டுமென்றே ஒதுக்கி உள்ளார்.
    இது போன்ற சின்ன தனமான காரியங்களை செய்து கலைஞர்களின் மனதை புன்படுத்துகிறார்கள்.
    ஹிட்ஸ் வேண்டும் என்றால் 18 + பதிவு போடலாம். அதை விட்டு இப்படி செய்வது முறை அல்ல. இங்கு வந்து விளக்கம் வேறு.
    உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  23. HellBOY :
    // இந்த பதிவை கருந்தேள் கண்ணாயிரம் அவர்களுக்கு சமர்பிக்கிறேன் ...
    அவரோட ப்ளாக் ல போஸ்ட் பண்ணினேன் வரல அதன் இங்க போஸ்ட் பன்றேன் ...
    யாராசு இத அங்க போஸ்ட் பண்ணுகபா உங்களுக்கு புண்ணியமா போகும் ..... //


    அடா பாவிகளா தமிழனை அழிக்க வெளிய இருந்து யாரும் வர தேவை இல்ல ...நீங்களே போதும்டா சாமி ....
    கமல் மற்ற ஆங்கில படங்களை காப்பி பண்ணிட்டார் நு ஒரே ஒரு தவற மட்டும் வட்சு மொத்தமா அவரையே நாரடுசுடிகளே ...
    இந்த நாட்டுல எவன்டா ஒழுங்கா இருக்கான் மகாத்மா கூட ஒரு சில விஷயங்கள்ல ரெம்ப மோசமான ஆளு அவர பத்தி ஆங்கில எழுத்தாளர்கள் கிழி கிழி நு கிளுசுருகாணுக அதுக்காக அவரோட நல்ல leadership சரி இல்ல அவரு சுயநலம் உள்ளவரா...சொல்லுங்க பாப்போம் ?
    நீங்க சொல்ற எல்லா ஆங்கில படங்களும் original தான்னு எப்படி சொல்றிங்க அதுவும் copy யா கூட இருக்கலாம் இது அந்த நாட்டுல இருக்கவனுக்கு தான் தெரியும் ...
    ஒரு நல்ல writer கு அழகு நிறை குறை இரண்டையுமே ழுதணும் நீங்க குறைகள மட்டுமே சொல்லி இருகரிங்க நீங்க எழுதுனதுல எனக்கு உடன்பாடே இல்ல.

    எல்லாதையு நான் ஒத்துகறேன் ஆனா கடைசியா சொன்னிகளே சாரு முடியலடா சாமி ...அவரு எல்லாம் ஒரு ஆளு அவருக்கு தன்னோட சுய புராணம் பாடவே நேரம் பத்தல இதுல கமல் பத்தி அவரு சொல்றாரு ...
    சாரு & உங்களை பத்தி தெருஞ்சவங்க அதிகம் போன 1 லட்சம் பேரு இருக்குமா ?(ஹி ஹி பிரபல பதிவரா ?)
    நீங்களே சுய புராணம் பாடும்போது கமல் தன்ன பத்தி சுய புராணம் பாடறதுல தப்பே இல்ல
    நீங்க காந்தி பத்தி உண்மையா எழுதி இல்லாட்டி உண்மைய படுசு பாருங்க தெரியும் அவரே எவளோ தப்பு பண்ணி இருக்காருன்னு
    போங்கடா நீங்களு உங்க ப்ளாக் ம் எவன் சிக்குவான்னு அலையரிங்க

    ReplyDelete
  24. HellBOY :
    // இந்த பதிவை கருந்தேள் கண்ணாயிரம் அவர்களுக்கு சமர்பிக்கிறேன் ...
    அவரோட ப்ளாக் ல போஸ்ட் பண்ணினேன் வரல அதன் இங்க போஸ்ட் பன்றேன் ...
    யாராசு இத அங்க போஸ்ட் பண்ணுகபா உங்களுக்கு புண்ணியமா போகும் ..... //


    தமிழ் மக்களே நீங்க இனிமே கமல் படம் பாக்க வேண்டாம் அது எல்லாம் copy sexy இருக்கும் heroin உதட கடிபாரு அதனால நீங்க இனிமே விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா,சிம்பு,தனுஷ்,முடுன்சா
    சிவாஜி ,MGR படம் பாருங்க மறக்காம
    பாக்யராஜ் ,செல்வராகவன் ,வாசு,ராமநாராயணன் படத்த குடும்பத்தோட பாருங்க ...
    இங்க மொல்லாரி முடுசவிக்கி ரௌடி எல்லாம் முதலமைசர் ,அமைசர் முக்கியமா கற்பு கரசி கு%%#பு வேற .
    அவங்களுக்கு குனிசு #%%^$ நில்லுங்க கமல் தான் இங்க சரி இல்ல ..
    முக்கியமா இமயமலை போறேன்னு சொலிட்டு இருக்கறவரு படம் பாருங்கப அவரு தமிழ் சினிமா க்கு நாட்டுக்கு உங்களுக்கு நெறைய செஞ்சு இருகாரு...

    ஹி.. ..ஹி.. ..ஹி..
    நீங்க சாரு எல்லாரும் சரியான காமெடி பீஸ் யா உங்களுக்கு நாலு பேரு ஜால்ரா வேற
    இவரு என்னமோ பெருசா கண்டு புடுச மாறி ...
    அப்பாட இன்னைக்கு எனக்கு நல்லா தூக்கம் வரும் ...
    நான் திரும்பி வருவேன் ...
    இதே மாறி கிழிகறமாரி பதிவு போடுங்கண்ணே !!!
    கருந்தேள் கண்ணாயிரம் அண்ணா !!!

    ReplyDelete
  25. நான் கமல் ரஜினி யாரையும் தாக்கல,உள்ளதை சொல்லுகிறேன் ,நீங்க மறந்ததை நான் நினைவு படுத்துகிறேன் நடந்தவைகளை

    ReplyDelete
  26. இனி என்ன செய்வார்கள்?? மனிரத்னம், கமல்ஹாசன்? நம்ம ஊர் டைரக்டர்களின் கதை சுடும் வேகத்தை பார்த்து அரண்டு போய் இருக்கிறார்கள் ஹாலிவுட்காரர்கள் இப்படியே விட்டா நம்ம கதைய நாம படம் பண்றதுக்கு முன்னாடி இந்தியாகாரங்க பண்னிடுவாங்கன்னு பயந்து போயிட்டாங்க.. இனிமே அனுமதி இல்லாம சுட்ட கேஸ் போடுவோம்னு ஹாலிவுட் நிறுவனங்கள் அறிவித்திருக்கிறார்கள்.. அதனால. பாலிவுட் டைரக்டர்கள் உஷாராயிட்டாங்க முதல் கட்டமாக இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர். “ஸ்டெப் மாம்” ஹாலிவுட் படத்தின் உரிமையை வாங்கி, “வீ ஆர் ஃபேமிலி” படத்தை தயாரித்தார். அடுத்து “இத்தாலியன் ஜாப்” பட உரிமையை இந்தி இயக்குனர்கள் அப்பாஸ்&மஸ்தான் வாங்கியுள்ளனர். இந்த ஹாலிவுட் படத்தை அவர்கள் இந்தியில் படமாக்க உள்ளனர். அபிஷேக் பச்சன், பாபி தியோல், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். தொடர்ந்து மேலும் சில ஹாலிவுட் படங்களின் உரிமையை வாங்கவும் இந்தி பட தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்கள் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், ஹாலிவுட் நிறுவனங்களின் எச்சரிக்கைதானாம். வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், ட்வென்டித் செஞ்சுரி ஃபாக்ஸ், சோனி உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் இந்தி சினிமாவுக்கு வந்துவிட்டன. தமது தயாரிப்பில் வெளியான படங்களை இந்தியில் காப்பி அடிப்பதை கண்டு, இந்நிறுவனங்கள் கொதித்தன. வழக்கு போடுவோம் என்றும் எச்சரித்தன. இதனால் உரிமை வாங்கி ரீமேக் செய்யுங்கள் என பாலிவுட்டுக்கு இந்தி தயாரிப்பாளர் சஙகம் மறை முகமாக உத்தரவு போட்டிருக்கிறதாம். இதையடுத்துதான் இந்த மாற்றம். ஃபாக்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவிலும் நுழைந்து விட்டது. சீக்கிரமே வேறு சில ஹாலிவுட் நிறுவனங்களும் வர உள்ளன. இதனால் கோலிவுட்டும் கலக்கத்தில் உள்ளது.

    இதுல என்ன காமெடினா ஃபாக்ஸோட இந்திய பிரதிநிதி முருக தாஸ் அவர் எடுத்து ஹிட்டான கஜினியும் மொமண்டோ காப்பி, எடுத்துட்டு இருக்க 7ஆம் அறிவும் , இன்செப்சன் காப்பி, ஸோ முதல்ல முருகதாஸ் ரைட்ஸ் வாங்கனும்

    ReplyDelete
  27. இனி என்ன செய்வார்கள்?? மனிரத்னம், கமல்ஹாசன்? நம்ம ஊர் டைரக்டர்களின் கதை சுடும் வேகத்தை பார்த்து அரண்டு போய் இருக்கிறார்கள் ஹாலிவுட்காரர்கள் இப்படியே விட்டா நம்ம கதைய நாம படம் பண்றதுக்கு முன்னாடி இந்தியாகாரங்க பண்னிடுவாங்கன்னு பயந்து போயிட்டாங்க.. இனிமே அனுமதி இல்லாம சுட்ட கேஸ் போடுவோம்னு ஹாலிவுட் நிறுவனங்கள் அறிவித்திருக்கிறார்கள்.. அதனால. பாலிவுட் டைரக்டர்கள் உஷாராயிட்டாங்க முதல் கட்டமாக இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர். “ஸ்டெப் மாம்” ஹாலிவுட் படத்தின் உரிமையை வாங்கி, “வீ ஆர் ஃபேமிலி” படத்தை தயாரித்தார். அடுத்து “இத்தாலியன் ஜாப்” பட உரிமையை இந்தி இயக்குனர்கள் அப்பாஸ்&மஸ்தான் வாங்கியுள்ளனர். இந்த ஹாலிவுட் படத்தை அவர்கள் இந்தியில் படமாக்க உள்ளனர். அபிஷேக் பச்சன், பாபி தியோல், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். தொடர்ந்து மேலும் சில ஹாலிவுட் படங்களின் உரிமையை வாங்கவும் இந்தி பட தயாரிப்பாளர்கள் பேசி வருகிறார்கள் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், ஹாலிவுட் நிறுவனங்களின் எச்சரிக்கைதானாம். வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், ட்வென்டித் செஞ்சுரி ஃபாக்ஸ், சோனி உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் இந்தி சினிமாவுக்கு வந்துவிட்டன. தமது தயாரிப்பில் வெளியான படங்களை இந்தியில் காப்பி அடிப்பதை கண்டு, இந்நிறுவனங்கள் கொதித்தன. வழக்கு போடுவோம் என்றும் எச்சரித்தன. இதனால் உரிமை வாங்கி ரீமேக் செய்யுங்கள் என பாலிவுட்டுக்கு இந்தி தயாரிப்பாளர் சஙகம் மறை முகமாக உத்தரவு போட்டிருக்கிறதாம். இதையடுத்துதான் இந்த மாற்றம். ஃபாக்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவிலும் நுழைந்து விட்டது. சீக்கிரமே வேறு சில ஹாலிவுட் நிறுவனங்களும் வர உள்ளன. இதனால் கோலிவுட்டும் கலக்கத்தில் உள்ளது.

    இதுல என்ன காமெடினா ஃபாக்ஸோட இந்திய பிரதிநிதி முருக தாஸ் அவர் எடுத்து ஹிட்டான கஜினியும் மொமண்டோ காப்பி, எடுத்துட்டு இருக்க 7ஆம் அறிவும் , இன்செப்சன் காப்பி, ஸோ முதல்ல முருகதாஸ் ரைட்ஸ் வாங்கனும்

    ReplyDelete
  28. http://narumugai.com/?p=11350 இனி என்ன செய்வார்கள்?? மனிரத்னம், கமல்ஹாசன்??

    September 8, 2010

    ReplyDelete
  29. @ access!

    தொடர்ந்து நீங்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் தகவல்களுக்கு நன்றி!

    @ ச.செந்தில்வேலன் / S.Senthilvelan

    உங்களிடமிருந்து வரும் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!


    @ விதிசெய்வோம்

    பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் நன்றிங்க!

    @ Anonymous

    வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete
  30. HellBoy:
    Access அண்ணா ரெம்ப நன்றி ...
    என்னோட comments கருந்தேள் கண்ணாயிரம் அண்ணா ப்ளாக் ல கொண்டு போயி சேர்த்ததுக்கு ...

    ReplyDelete
  31. வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், ட்வென்டித் செஞ்சுரி ஃபாக்ஸ், சோனி உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் வந்தாச்சு ,தயாநிதி உதயநிதி கலாநிதி எல்லா நிதிகளும் நிதி கொடுத்து உத்தரவு வாங்கி தான் ஆங்கில படங்கள மொழி மாற்றம் அல்லது ரீமேக் செய்யணும் ,அதனால் இந்த அங்க காபி அடிச்சான் இங்க காபி அடிச்சான் என்று சொல்லும் உரிமை ஹாலிவுட் பட கம்பனிகளுக்கு தான் உண்டு,சாரு மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் போன்றவர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் வெறியர்களுக்கும் உரிமை கிடையாது கமல் காபி படங்களை பற்றி பேச.அப்படி யாரவது பேசினால் எந்திரன் படம் பாத்து தடவை பார்க்க தண்டனை நிறைவேற்ற படும் ,அதுவும் மிகவும் பழைய தியட்டரில் ,மூட்டை பூச்சி கடி உடன் ,சவுண்ட் சிஸ்டம் மிகவும் மோசமாக உள்ள திரியாரங்கல்களில் தான் பார்க்க வேண்டும்

    ReplyDelete
  32. மிக்க நன்றி கமல் ஒரு அற்புத கலைஞன் என்ற தலைப்புக்கு ,சாரு அவர்களுக்கு மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் போன்றவர்களுக்கு அதிசயம் நடந்ததா என்பதற்கு பதிலடி உங்க தலைப்பு.உங்க அளவிற்கு பதிவு போட பதிவு எழுத எனக்கு பொறுமை இல்லை ,யாரும் கேட்க ஆள் இல்லை என்று சாரு பேசினார் அதை கருந்தேள் தொடர்கிறார் ,சாரு தண்ணி அடிக்க கமல் காசு கொடுக்கவில்லை என்ற கோபமா அல்லது ப்றேவிஎவ் ஷோ கூப்பிடல அந்த கோபமா தெரியல ,ரஜினி வெறும் நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு நிறைய நேரம் இர்ருக்கு எல்லாரையும் அரவணைத்து செல்ல ஆனால்கமல் அவர்கள் எல்லா விசியங்களும் தானே இழுத்து போட்டு கொண்டு செய்பவர் ஆகவே நேரமின்மை காரணமாக நிறைய பேரை கண்டு கொள்ள முடியவில்லை அதனால் அவர்களை உதாசீன படுத்தியதாக நினைப்பார்கள் ,அது தான் ரஜினி கமலுக்கு உள்ள வேற்றுமை.தசவதாரம் படம் பண்ணும் பொது எனக்கு தெரிந்த நடிகர் ஒருவர் டைரக்டர் ரவி குமார் பார்க்க செல்லும் பொது கமல் அங்கே இருந்து உள்ளார் தசவதாரம் எவ்வளவு கஷ்டம் பாத்து ரோல் மிக சிந்தனை செயல் வேண்டும் ,அந்த நடிகருக்கு கோபம் கமல் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று ,இதை ரமேஷ் க்ஹன்ன அவர்கள் சொன்னது வெறும் நடிச்சு கோண்டிநிட்டி பார்க்க பழைய சோட்ஸ் மறந்து போகும் அதே துணி இருக்கனும் ,நம்ம கமல் சார் பத்து வேடத்தில் நடிக்க எவ்வளவவு சிரம பட்டு இர்ருப்பர் ,அதை மனதில் கொள்ளாமல் நடிகர் அதுவும் முன்னணி நடிகர் கிடையாது அவர் பெயர் படையப்பா ரமேஷ் தெனாலி படத்தில் கூட கமலுடன் பஸ்ல சண்டை போடுவார் ,படையப்பா படத்தில் ரஜினி நண்பர் கூட்டதில் வருவார் ,நான் தசவதாரம் பற்றி அவரிடம் எதாவது தகவல் கிடைக்குமா என்று கேட்டல் அவர் பதில் விஷ் பண்ணினால் கமல் கண்டு கொள்ளவில்லை,இதை சேரன் அவர்கள் சொல்லி இருக்கிறார் மகாநதி பட ஷூட்டிங் பொது சேரன் நிறைய முறை வணக்கம் சொல்லி இருக்கிறார் பதிலுக்கு கமல் வணக்கம் சொல்லவில்லை ,அதனால் கமலிடம் நெருங்கி பேச தயக்கம்,அதற்க்கு கமல் சொன்னது நானும் வணக்கம் சொல்லிய நினைப்பில் இருந்து விட்டேன் ஏற்று .காட்சி சரியாக வர வேண்டும் காட்சிக்கு தன்னை தயார் செய்து கொள்கிறார் மனதளவில் இந்த ஈடுபாட்டை கூட படையப்பா ரமேஷ் ஒரு நடிகர இருந்தும் புரிந்து கொள்ளவில்லை ,எனக்கும் கஷ்டமாக இர்ருக்கு ஏன் இப்படி என்று ,இதே போல தான் திரையில் கண்ணும் கமல் பட காட்சிகள் மிகவும் தப்பான அர்த்தம் கண்டுபிடிக்க படுகிறது .

    ReplyDelete
  33. மிக்க நன்றி கமல் ஒரு அற்புத கலைஞன் என்ற தலைப்புக்கு ,சாரு அவர்களுக்கு மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் போன்றவர்களுக்கு அதிசயம் நடந்ததா என்பதற்கு பதிலடி உங்க தலைப்பு.உங்க அளவிற்கு பதிவு போட பதிவு எழுத எனக்கு பொறுமை இல்லை ,யாரும் கேட்க ஆள் இல்லை என்று சாரு பேசினார் அதை கருந்தேள் தொடர்கிறார் ,சாரு தண்ணி அடிக்க கமல் காசு கொடுக்கவில்லை என்ற கோபமா அல்லது ப்றேவிஎவ் ஷோ கூப்பிடல அந்த கோபமா தெரியல ,ரஜினி வெறும் நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு நிறைய நேரம் இர்ருக்கு எல்லாரையும் அரவணைத்து செல்ல ஆனால்கமல் அவர்கள் எல்லா விசியங்களும் தானே இழுத்து போட்டு கொண்டு செய்பவர் ஆகவே நேரமின்மை காரணமாக நிறைய பேரை கண்டு கொள்ள முடியவில்லை அதனால் அவர்களை உதாசீன படுத்தியதாக நினைப்பார்கள் ,அது தான் ரஜினி கமலுக்கு உள்ள வேற்றுமை.தசவதாரம் படம் பண்ணும் பொது எனக்கு தெரிந்த நடிகர் ஒருவர் டைரக்டர் ரவி குமார் பார்க்க செல்லும் பொது கமல் அங்கே இருந்து உள்ளார் தசவதாரம் எவ்வளவு கஷ்டம் பாத்து ரோல் மிக சிந்தனை செயல் வேண்டும் ,அந்த நடிகருக்கு கோபம் கமல் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று ,இதை ரமேஷ் க்ஹன்ன அவர்கள் சொன்னது வெறும் நடிச்சு கோண்டிநிட்டி பார்க்க பழைய சோட்ஸ் மறந்து போகும் அதே துணி இருக்கனும் ,நம்ம கமல் சார் பத்து வேடத்தில் நடிக்க எவ்வளவவு சிரம பட்டு இர்ருப்பர் ,அதை மனதில் கொள்ளாமல் நடிகர் அதுவும் முன்னணி நடிகர் கிடையாது அவர் பெயர் படையப்பா ரமேஷ் தெனாலி படத்தில் கூட கமலுடன் பஸ்ல சண்டை போடுவார் ,படையப்பா படத்தில் ரஜினி நண்பர் கூட்டதில் வருவார் ,நான் தசவதாரம் பற்றி அவரிடம் எதாவது தகவல் கிடைக்குமா என்று கேட்டல் அவர் பதில் விஷ் பண்ணினால் கமல் கண்டு கொள்ளவில்லை,இதை சேரன் அவர்கள் சொல்லி இருக்கிறார் மகாநதி பட ஷூட்டிங் பொது சேரன் நிறைய முறை வணக்கம் சொல்லி இருக்கிறார் பதிலுக்கு கமல் வணக்கம் சொல்லவில்லை ,அதனால் கமலிடம் நெருங்கி பேச தயக்கம்,அதற்க்கு கமல் சொன்னது நானும் வணக்கம் சொல்லிய நினைப்பில் இருந்து விட்டேன் ஏற்று .காட்சி சரியாக வர வேண்டும் காட்சிக்கு தன்னை தயார் செய்து கொள்கிறார் மனதளவில் இந்த ஈடுபாட்டை கூட படையப்பா ரமேஷ் ஒரு நடிகர இருந்தும் புரிந்து கொள்ளவில்லை ,எனக்கும் கஷ்டமாக இர்ருக்கு ஏன் இப்படி என்று ,இதே போல தான் திரையில் கண்ணும் கமல் பட காட்சிகள் மிகவும் தப்பான அர்த்தம் கண்டுபிடிக்க படுகிறது .

    ReplyDelete
  34. my reply to mohan மிக்க நன்றி கமல் ஒரு அற்புத கலைஞன் என்ற தலைப்புக்கு ,சாரு அவர்களுக்கு மற்றும் கருந்தேள் கண்ணாயிரம் போன்றவர்களுக்கு அதிசயம் நடந்ததா என்பதற்கு பதிலடி உங்க தலைப்பு.உங்க அளவிற்கு பதிவு போட பதிவு எழுத எனக்கு பொறுமை இல்லை ,யாரும் கேட்க ஆள் இல்லை என்று சாரு பேசினார் அதை கருந்தேள் தொடர்கிறார் ,சாரு தண்ணி அடிக்க கமல் காசு கொடுக்கவில்லை என்ற கோபமா அல்லது ப்றேவிஎவ் ஷோ கூப்பிடல அந்த கோபமா தெரியல ,ரஜினி வெறும் நடிகர் மட்டும் என்பதால் அவருக்கு நிறைய நேரம் இர்ருக்கு எல்லாரையும் அரவணைத்து செல்ல ஆனால்கமல் அவர்கள் எல்லா விசியங்களும் தானே இழுத்து போட்டு கொண்டு செய்பவர் ஆகவே நேரமின்மை காரணமாக நிறைய பேரை கண்டு கொள்ள முடியவில்லை அதனால் அவர்களை உதாசீன படுத்தியதாக நினைப்பார்கள் ,அது தான் ரஜினி கமலுக்கு உள்ள வேற்றுமை.தசவதாரம் படம் பண்ணும் பொது எனக்கு தெரிந்த நடிகர் ஒருவர் டைரக்டர் ரவி குமார் பார்க்க செல்லும் பொது கமல் அங்கே இருந்து உள்ளார் தசவதாரம் எவ்வளவு கஷ்டம் பாத்து ரோல் மிக சிந்தனை செயல் வேண்டும் ,அந்த நடிகருக்கு கோபம் கமல் தன்னை கண்டு கொள்ளவில்லை என்று ,இதை ரமேஷ் க்ஹன்ன அவர்கள் சொன்னது வெறும் நடிச்சு கோண்டிநிட்டி பார்க்க பழைய சோட்ஸ் மறந்து போகும் அதே துணி இருக்கனும் ,நம்ம கமல் சார் பத்து வேடத்தில் நடிக்க எவ்வளவவு சிரம பட்டு இர்ருப்பர் ,அதை மனதில் கொள்ளாமல் நடிகர் அதுவும் முன்னணி நடிகர் கிடையாது அவர் பெயர் படையப்பா ரமேஷ் தெனாலி படத்தில் கூட கமலுடன் பஸ்ல சண்டை போடுவார் ,படையப்பா படத்தில் ரஜினி நண்பர் கூட்டதில் வருவார் ,நான் தசவதாரம் பற்றி அவரிடம் எதாவது தகவல் கிடைக்குமா என்று கேட்டல் அவர் பதில் விஷ் பண்ணினால் கமல் கண்டு கொள்ளவில்லை,இதை சேரன் அவர்கள் சொல்லி இருக்கிறார் மகாநதி பட ஷூட்டிங் பொது சேரன் நிறைய முறை வணக்கம் சொல்லி இருக்கிறார் பதிலுக்கு கமல் வணக்கம் சொல்லவில்லை ,அதனால் கமலிடம் நெருங்கி பேச தயக்கம்,அதற்க்கு கமல் சொன்னது நானும் வணக்கம் சொல்லிய நினைப்பில் இருந்து விட்டேன் ஏற்று .காட்சி சரியாக வர வேண்டும் காட்சிக்கு தன்னை தயார் செய்து கொள்கிறார் மனதளவில் இந்த ஈடுபாட்டை கூட படையப்பா ரமேஷ் ஒரு நடிகர இருந்தும் புரிந்து கொள்ளவில்லை ,எனக்கும் கஷ்டமாக இர்ருக்கு ஏன் இப்படி என்று ,இதே போல தான் திரையில் கண்ணும் கமல் பட காட்சிகள் மிகவும் தப்பான அர்த்தம் கண்டுபிடிக்க படுகிறது .

    ReplyDelete
  35. sorry 3 times blog error so posting 3 times

    ReplyDelete
  36. //இருப‌த்தைந்து ஆண்டுக‌ளுக்கு முன் வ‌ந்த‌ சாதா‌ர‌ண காமெடி ப‌ட‌மாகிய‌ 'எல்லாமே இன்ப‌ மைய‌ம்' ப‌ட‌த்தில் க‌ம‌லின் உழைப்பைப் பார்த்தாலே இதைப் புரிந்து கொள்ள‌லாம்.//

    ************

    இந்த படம் நாகேஷ் அவர்கள் நடிப்பில் வெளிவந்த ஒரு படத்தின் அப்பட்டமான ரீமேக்... உபயம் பஞ்சு & கமல்.....

    ReplyDelete
  37. // ஒரு காலத்தில் அவரும் ரஜினியுடன் போட்டி போட்டுக் கொண்டு மசாலாப் படங்களிலேயே அதிகமாக நடித்துக் கொண்டிருந்தார்.தமிழ் சினிமாவின் மோசமான காலகட்டமது. //

    சரி.... உண்மை... ஆனால், இது என்ன?

    //மற்ற மொழிகளில் தனக்குப் பிடித்த படங்களான 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு', 'சத்யா','உன்னால் முடியும் தம்பி','குருதிப்புனல்' முதற்கொண்டு 'உன்னைப்போல் ஒருவன்' வரை இங்கு கொண்டு வந்திருக்கிறார்//

    இவையெல்லாம் அற்புத கலைப்படைப்புகளா?? இவையெல்லாமும் கூட மசாலா குப்பைகளே (உன்னால் முடியும் தம்பி தவிர்த்து... அது கே.பி. தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து இயக்கிய ருத்ரவீணா படத்தின் ரீமேக்.....)

    ReplyDelete
  38. மோகன் சார்....

    கமலுக்கு சப்பைகட்டு கட்டுங்கள்... ஆனால், அவர் பேசுவது சரியா?

    தன் படங்கள் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டு அது கிடைக்காமல் போனவுடன் கமல் சொன்னது இது - ஆஸ்கர் விருது என்பது அமெரிக்கர்களால், அமெரிக்கப்படங்களுக்கு வழங்கப்படுவது... ஒரு நாள் நாம் அவர்களை கூப்பிட்டு விருது வழங்கும் நிலை வரவேண்டும்... ஏன் சார், அவர்கள் படத்தை காப்பியடித்து அவர்களுக்கே அனுப்பினால், அவார்ட் கிடைக்குமா.... அப்படியே அவர்களை கூப்பிட்டு அவர்களின் படங்களுக்கு அவார்ட் தான் கொடுக்க முடியுமா.... அப்படி கொடுக்கும் தகுதியில் தான் நாம் இல்லையே (நாம் தான் அவர்களிடம் இருந்து காப்பி அடிக்கிறோமே....)

    அதே ஆஸ்கர் ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கியவுடன் கமலாம் எதுவும் பேசமுடியவில்லை என்பதே உண்மை..

    சரக்கு இருந்தால், எதுவும் கிடைக்கும்... அதை விடுத்து வெட்டிப்பேச்சு பேசுவதால், எதுவும் நடக்கப்போவதில்லை....

    ReplyDelete
  39. ஆஸ்கார் விருது ரஹ்மான் அவர்களுக்கு வந்தது மகிழ்ச்சி ,எப்படி வந்தது அந்த சலும் டாக் மில்லிஒநைரெ பண்ணிய பாக்ஸ் கம்பெனி,மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் ரஹ்மான் அவர்களுக்கு சலும் டாக் விட நல்ல இசை தமிழ் ஹிந்தியில் பண்ணி உள்ளார் ,அதற்க்கு என் கொடுக்கல ,அதற்கும் கமலுக்கும் கோன்புசே பண்ண வேண்ண்டாம் கமல் சொன்னது முற்றிலும் சரி அவங்க நாடு கம்பெனி பிலிம் தான் அவரது வாங்கியது.அதில் இந்தியாவில் உள்ள மார்க்கெட் அவர்களுக்கு தேவை ,சலும் டாக் பெரிய வெற்றி பெறவில்லை என்பதே உண்மை ,அவவ்வளவு அவார்ட் கொடுத்து இந்திய மொழிகளில் வெளி இட்டு படம் வெற்றி பெற வில்லை என்பதே உண்மை ,கமலும் நீங்க சொல்லியது போல ஒரு வெளி நாடு கம்பெனி படம் ஏற்று கொண்டு ஆஸ்கார் அனுபலாம் ,அனால் இந்திய படத்திலே அவர் சாதிக்க வேண்டும் ,அன்பே சிவம் தேசிய விருது பெறவில்லை கமல் நடிப்பில் அதற்க்கு பதிலாக விக்ரம் அவர்கள் பிதா மகன் படத்திற்கு கிடைத்தது ,யார் நன்றாக நடிகிரர்களோ அவர்களுக்கு கிடைக்க வேண்டும் ,ஒரு வேலை பிதா மகன் வந்து இருக்க விடில் கமலுக்கு இன்னும் ஒரு தேசிய விருது கிடைத்து இருக்கும் ,நீங்க சொன்ன கமல் காபி அடித்த படங்கள் எல்லாம் ஓகே ,இந்திரன் சந்திரன் பண்ணும் பொது மோகன்லால் தொப்பை வைத்து கொண்டு கொண்டு நடித்தார் அங்கிள் பண் என்ற படத்தில் அது ப்ளாப் என்று நினைக்கிறன் ,ஏன் எட்டி முர்ப்ய் மட்டும் தான் அப்படி நடிக்க முடியுமா நம்மாலும் செய்ய முடியும் என்று நிரூபித்தார் கமல்

    ReplyDelete
  40. ரஹ்மான் மற்றும் ரஜினி வளர்ச்சி பார்த்து பயமா இருக்கு ,ப்ருசே bruce லீ ,மைகேல் ஜாக்சன் போல ஆகி விடுமோ என்று ,சமிபத்தில் ச்டேவே இரவின் stewe irwin ச்ரோகோடிலே ஹன்டர் ஹாலிவுட் பொய் என்ன ஆயிற்று ,அனிமல் பிளானெட் முதலை பிடிபாரே அவர் ஹாலிவுட் போனவுடன் மரணம் ,கமல் அவர்கள் ஹிந்தியில் மாபியா கங்க mafia gang மிரட்டலினால் கால் உன்ற முடியாமல் மீண்டும் தமிழ் நடிக்க ஆரம்பித்து விட்டார் அது நாம் செய்த பாக்கியம் ,அதை விட்டு விட்டு அதை காபி அடித்தார் இதை காபி அடித்தார் என்று டைம் வேஸ்ட் பண்ணாதீர்கள் .கடமை கண்ணியம் கட்டுப்பாடு ,குருதி புனல் ,உன்னை போல் ஒருவன் மசாலா படங்கள ,தமிழ் சினிமாவில் பாடல்கள் இல்லை என்றால் ஓடுமா ஓடாதா தெரியாது அனால் உங்க படத்தை சந்தை படுத்த முடியாது ,அது தான் பாடல்கள் எனும் ஸ்பீட் பிரேக் போடாத படங்கள் ஆங்கில படங்களுக்கு இணையாக,ருத்ர வீனா உன்னால் முடியும் தம்பி இங்கே உதயமூர்த்தி அவர்கள் இருந்த்து படைத்திருக்கு பெரிய பிளஸ் தெலுகுவில் வெறும் சினிமா அனால் இங்கே உதயமூர்த்தி அவர்களால் ஒரு பெரிய விசையம் இன்று அப்துல் கலாம் போல அன்று உதயமூர்த்தி அவர்களை கௌரவ படித்திய படம் ,இன்றும் நான் திரு உதயமூர்த்தி அவர்கள் வைத்த மாற நிழலில் பயன் பெறுகிறேன் சென்னையில் என்ற முறையில் சொல்கிறேன் அது வெறும் டைம் பாஸ் சினிமா அல்ல ,சமுதாய மாற்றத்திற்கான வித்து ,விதை

    ReplyDelete
  41. கமல் வேறு ரஜினி வேறு என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பு இல்லை ,கமல் ரஜினி இருவரின் ஆரம்ப கால வெற்றி பஞ்சு அருணாசலம் அவர்களையே சேரும்,கமல் பஞ்சு அவர்கள் பாணியை கை விட்டதால் தான் நான் தமிழ் படமே பர்ர்க்க ஆரம்பித்தேன் ,தன நூறாவது படம் ராஜா பார்வையாக ஏன் நடிக்க வேண்டும் .பஞ்சு அண்ணன் கிட்ட சொல்லி ஒரு சிறப்பான மசாலா பண்ணி இரருக்கலாம் அல்லவா,சத்யா படம் கமல் வழியில் ஒரு ஒரு திருப்புமுனை ஏன் என்றால் ரஜினி அவர்கள் அமிதாப் பாணியில் கொமெடியிலும் கலக்கி கொண்டு இருந்தார் அதை ஈடு கட்ட கமல் ச்ரழி மோகன் கூட்டணி உருவானது ,அதில் இருந்து தான் கொமெடி கலை கட்ட ஆரம்பித்தது EVERYTHING IS FAIR IN LOVE AND WAR என்பது போல EVERYTHING IS FAIR IN HUMOUR AND FILMS I MEAN KAMAL FILMS comedikkaga makkalai makilvikka yethaiyum seiyalaam

    ReplyDelete
  42. கமல் வேறு ரஜினி வேறு என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பு இல்லை ,கமல் ரஜினி இருவரின் ஆரம்ப கால வெற்றி பஞ்சு அருணாசலம் அவர்களையே சேரும்,கமல் பஞ்சு அவர்கள் பாணியை கை விட்டதால் தான் நான் தமிழ் படமே பர்ர்க்க ஆரம்பித்தேன் ,தன நூறாவது படம் ராஜா பார்வையாக ஏன் நடிக்க வேண்டும் .பஞ்சு அண்ணன் கிட்ட சொல்லி ஒரு சிறப்பான மசாலா பண்ணி இரருக்கலாம் அல்லவா,சத்யா படம் கமல் வழியில் ஒரு ஒரு திருப்புமுனை ஏன் என்றால் ரஜினி அவர்கள் அமிதாப் பாணியில் கொமெடியிலும் கலக்கி கொண்டு இருந்தார் அதை ஈடு கட்ட கமல் crazy மோகன் கூட்டணி உருவானது ,அதில் இருந்து தான் கொமெடி கலை கட்ட ஆரம்பித்தது கிரேசி மோகன் அவர்கள் பிரபலமானது பாய்ஸ் இன் பாலவாக்கம் கிரேசி பாய்ஸ் இன் பாலவாக்கம் அது கிரேசி பாய்ஸ் ஆங்கில படங்களை பார்த்து மேடை நாடகங்கள் செய்து வெற்றி பெற்றார் ,குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கமலுக்கு மறு பிறவி கொடுத்தவர் கிரேசி மோகன் தான் என்று சொன்னால் அது மிகை ஆகாது ,நாம் அதற்க்கு ஆங்கில படங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் ,கிரேசி மோகன் போல கமல் போல எல்லோராலும் ஆங்கில படத்தை அதுவும் காபி அடிக்க முடியாது ஏன் என்றால் அதற்க்கு இந்திய வடிவம் கடினம் ஹாலிவுட் சென்சர் ப்ரோப்ளேம் கிடையாது நம்மக்கு அப்படி இல்லையே EVERYTHING IS FAIR IN LOVE AND WAR என்பது போல copy adithal kooda EVERYTHING IS FAIR IN HUMOUR AND FILMS I MEAN KAMAL FILMS comedikkaga makkalai makilvikka yethaiyum seiyalaam

    ReplyDelete
  43. ஹம படம் ஹிந்தி பாருங்க அமிதாப் வாழ்ந்த கதா பாத்திரம் ரஜினி சுரேஷ் கிருஷ்ணா சத்யா மூவீஸ் எப்படி அதை பாஷா பாஷா பாஷா படுகொலை செய்தார் ஹம படத்தை என்று உங்களுக்கே தெரியும்,அப்புறம் காபி அடிப்பதை பற்றி பேச யாருக்கு அருகதை இருக்கு என்று தெரியும்,அவளுவு பெரிய டான் பாஷா எதுக்கு ஆட்டோ டிரைவர் என்பது கேள்வி குறி அல்ல கேலி குறி ,ஹம படம் எம் ஜி ஆர் படம் அசோகன் சிரிக்கும் வில்லன் போல அனுபம் க்ஹெர் மிக அருமையாக பண்ணி இருப்பார் ,அமிதாப் வாழ்ந்த கதா பாத்திரத்தை எப்படி எல்லாம் கெடுக்க முடியுமோ அப்படி கெடுத்து வைத்தார் superstar ,நீங்களே பாருங்க.டுச்டின் ஹோப்ப்மன் வெள்ளைக்கார ஆன்டி டிரஸ் avvai shanmukhi கமல் மடிசார் மாமி ,அட்டை காபி ஒன்றும் கிடையாது இம்மி பிசகாமல் ,சா மில் நடத்தும் அமிதாப் பம்பாயில் டான் கூட கிடையாது சும்மா கூலி தொழிலாளி தான் அதை பாஷா பாஷா என்று அசிங்க படித்தியத்தை நீங்க பார்த்து இனி மேல காபி அடிப்பதை பற்றி வாய் கூட திறக்க மாடீங்க, இதில் அமிதாப் தம்பி ரஜினி தான், நான் உங்களை அனுபம் க்ஹெர் காமெடி வில்லன் ,இங்க தேவன் ,ஊரை விட்டு ஓடிய அமிதாப் தான் கொலையாளி என்று குட்டையை குழப்பும் வில்லன் ,ரகுவரன் கேரக்டர் danni , ஒரு ரஜினி படம் தான் பார்க்க சொல்கிறேன்,அனுபம் க்ஹெர் காமெடி வில்லன் ,இங்க தேவன் ,ஊரை விட்டு ஓடிய அமிதாப் தான் கொலையாளி என்று குட்டையை குழப்பும் வில்லன் ,ரகுவரன் கேரக்டர் ,காபி என்றால் காபி கண்ராவி காபி ,தழுவல் என்றால் தழுவல் ம்ஹா கண்ராவி CREATIVE ASSASSINATION,

    ReplyDelete
  44. trains planes automobiles copy anbe sivam the name says it all ,இன்னும் காட்டுமிராண்டி கௌ பாய் பிலிம் பலிக்கு பலி பழிக்கு பழி பார்க்கும் எடுக்கும் ஆட்கள் உள்ளவரை அன்பே சிவம் என்ற வார்த்தைக்கு மகத்துவம் தெரியாது அன்பே சிவம் என்று பெயர் சொன்னால் போதும் அதில் என்ன கதை வேண்டும் ஆங்கில படத்தை காபி அடிக்க ,உன்னை கொல்ல வந்தவனிடம் கூட அன்பு காட்டு,இதை டிரெக்டர் பாலா அவர்கள் பிதா மகனில் அன்பே சிவம் கிளைமாக்ஸ் வரும்,திருமுலர் சொன்னது இந்த பெயர் வைத்த நண்பர் பாராட்டினார் ,கமல் திருமுலர் சொன்னதை காபி அடித்தார் ,பாரதி சொன்னதையும் காபி அடித்தார் அவர் பாரதி ஆக நடிக்கவில்லை என்றாலும் அவர் செய்யும் கேரக்டர் முக்கால் வாசி பாரதி காபி தான்

    ReplyDelete
  45. Planes, Trains & Automobiles படத்தை ஒப்பிடும் போது ‘அன்பே சிவம்' ஆயிரம் மடங்கு சிறந்தது.

    ReplyDelete
  46. எதையும் காப்பி அடிக்காமல் எடுத்த ஒரே தமிழ் படம் "யாருக்கு யாரோ ஸ்டெப்நீ "

    இப்படிக்கு
    சாம் அன்டேர்சன்

    ReplyDelete
  47. @ @ R.Gopi!

    உங்கள் வருகைக்கு நன்றி. ஒரு காலத்தில் கமல் ஆஸ்காரை உயர்வாக நினைத்திருந்திருக்கலாம்.அதற்கப்புறம் அதை அவருக்கு பிடிக்காமல் போயிருந்திருக்கலாம்,உங்களுக்கு இப்போது கமலைப் பிடிக்காமல் போனது போல் :-)

    ReplyDelete
  48. கமலைத் திட்டித் தீர்ப்பவர்களின் கமென்ட்களையெல்லாம் பார்க்கும்போது(ம்...ஆங்கிலப்படங்களின் ஒரிஜினல் டைரக்டர்கள்,இந்தப் படங்களையெல்லாம் பார்த்திருந்தால் கூட கமலைப் பாராட்டியிருப்பார்கள்.குறைந்தபட்சம் இந்த அளவிற்குத் திட்டியிருக்க மாட்டார்கள்) ஒரு விசயம்தான் தோன்றுகிறது.உங்களுக்கெல்லாம் கமல் ஆங்கிலப்படங்களைப் காப்பி அடித்துப் படம் எடுத்திருக்கிறார் என்று தெரியுமுன்னமே கூட,கமலை ஏதோ சில‌ காரணங்களுக்காகப் பிடித்திருக்காது. காப்பி அடித்து படம் எடுத்ததால் திட்டுகிறோம் என்று சொல்லுவதெல்லாம் சும்மா சால்ஜாப்பு மாதிரிதான் தெரிகிறது.

    அதனால்,நான் என்ன சொன்னாலும் கமலைத் திட்டுவதை நீங்கள் விடப் போவதில்லை. அதேபோல் நீங்கள் என்ன சொன்னாலும்,நானும் கமலைப் பாராட்டுவதை நிறுத்த‌ப் போவதில்லை.அதனால் இந்த விசயத்திற்கு இத்தோடு முற்றுப்புள்ளி.

    ReplyDelete
  49. உண்மை எது பொய் எது என்று தெரிய வேண்டும் இல்லையா ,கருந்தேள் பேச்சை கேட்டால் எங்கோ கமல் அமெரிக்காவில ஆங்கில படத்தை திருடியதை சொல்லி சொல்லி காட்டுறார் ,திருடன் திருடன் என்று கூச்சல் போடறார் ,நம்ம வீட்ல இருக்கிற திருடன் ரஜினி ,அமிதாப் படங்களை காபி அடிக்கும் அடித்தே சூப்பர் ஸ்டார் ஆனவர்,மாவீரன் தான் பிளாப், வேலைக்காரன் ,பணக்காரன் ,பாஷா ,பில்லா , அதை நான் சொல்லி கொள்ள சுட்டி காட்ட ஜன நாயக உரிமை கருத்து உரிமை இருக்கு,முதலில் வீட்டை திருத்துங்க அப்புறம் நாட்டை நாட்டில் உள்ள கமலை திருத்துங்க

    ReplyDelete
  50. //இதில் கமல் ஏன் வெளிநாட்டுப் படங்களை தமிழ் படுத்தும்போது 'கிரெடிட்' கொடுக்கவில்லை என்பது மற்றொரு பிரச்சனை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான இயக்குனர்கள் வெளி நாட்டுப் படங்களைக் காப்பி அடித்து இங்கு படமெடுத்திருக்கிறார்கள்.அவர்களெல்லோரும் டைட்டில் கார்டில் ஒரிஜினல் படத்திற்கு 'கிரெடிட்' கொடுத்திருப்பது போலவும், கமல் மட்டுமே இதுவரை அதுபோல் செய்யாமல் இருப்பது போலவும் அவரை 'மட்டுமே' குறை சொல்வது ஏனென்று தெரியவில்லை.//

    இது தவறான வாதம் நண்பரே.. ஒரு செயலைத் தவறில்லை என்று சொல்வதும், நிரூபிக்கப் பட்ட பின் மற்ற செயல்களை உதாரணம் காட்டித் தப்பிக்கப் பார்ப்பதும் தவறு..

    வண்டியில் ஹெல்மெட் போடாமல் சென்றீர்கள் என்று சொல்லும்போது முதலில் மறுத்து விட்டு, பின் ஆதாரங்களுடன் சொன்ன பிறகு, அதுதான் ஊரில் எல்லோரும் ஹெல்மெட் போடாமல் ஒட்டுகிரார்களே என்னை மட்டும் ஏன் பிடிக்கிறீர்கள் என்று சொல்வதைப் போன்றது.. அவர் நல்லவராக இருக்கும் பட்சத்தில், மற்றவர்களைக் குறை கூறி தப்பித்தல் நியாயமாகாது...

    ReplyDelete
  51. http://senthilinpakkangal.blogspot.com/2010/09/blog-post_11.html

    நண்பரே.. இதோ என் பதிவு

    ReplyDelete
  52. helmet ஹெல்மெட் விஷயம் இது காபி அடிக்கும் விசையம் முடுச்சு போடதீங்க ,இது பெஞ்ச்மார்க் என்னும் விசையம் ,கக்கூஸ் என்று சொல்லிய டாய்லெட் என்று சொல்லியது போல் அப்புறம் பாத்ரூம் என்று சொல்லி அப்புறம் எப்படி ரெஸ்ட் ரூம் ஆனது உலகம் பூராவும் அமெரிக்காவை எல்ல விசயைதிலும் காபி அடிப்பார்கள் நீங்க போடும் பான்ட் சட்டை போன்ற விசையம் ,பிரபு தேவ மைக்கல் ஜாக்சன் போல அட வில்லை என்று சொன்னால் அவர் அட்ரெஸ் இல்லாமல் பொய் இருப்பார் ,உங்களுக்கு பிடிக்கவில்லை பிரபு தேவ மாதிரி அட தெரியல என்றால் மைக்கல் ஜாக்சன் நடனம் மட்டும் பாருங்க ,காபி அடித்தான் கிபி அடித்தான் என்று கூச்சல் போடாதீர்கள் ,எவ்வளவு பேருக்கு பிரபு தேவ போல மைக்கல் ஜாக்சன் நடனத்தை கமல் நடிப்பு போல ஆங்கில படத்தை காபி அடிக்க தெரியும் mudiyum ,திறமையை பாரடுங்கையா ,பொறமை படாதீங்க

    ReplyDelete
  53. @ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி!

    நண்பர் பிரகாஷிற்கு,கமல்கிட்ட இருக்கிற நல்ல விசயங்கள் எல்லாத்தையும் வசதியாக மறந்துவிட்டு,சில படங்களைக் காப்பி அடித்த விசயத்தை மட்டும் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது,அதற்கு நாங்களும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது சலிப்பாக இருக்கிறது. நண்பர் 'access' பிரபு தேவா பற்றிக் கொடுத்திருக்கும் உதாரணம் நல்ல உதாரணம். பிரபு தேவாவைப் பார்த்து தமிழ் நாட்டில் டான்ஸில் புது விசயங்களைக் கொண்டு வந்தவர்களும்,பல இளைஞர்களுக்கு டான்ஸின் மேல் ஈர்ப்பு வந்ததையும் நாம் மறுக்க முடியுமா?அதற்காக உடனே பிரபு தேவா,மைக்கேல் ஜாக்ஸனை அப்பட்டமாகக் காப்பி அடித்தார் என்று சொல்ல முடியுமா? சில பாடல்களில் பிரபு தேவா காப்பி அடித்தாலும்,'வெண்ணிலவே' பாடலின் நடனத்திற்காகவே நாம் அவரைப் பாராட்டுவதில்லையா?

    நண்பர் ஜாக்கி சேகரின் பதிவில்,நான் இட்ட பின்னூட்டத்தையும் கீழே இணைத்துள்ளேன்.

    "எனக்குத் தெரிந்து,கமல் காப்பி அடித்த படங்களுக்கு கிரெடிட் கொடுக்காதது மட்டும்தான் அவரின் தவறு என்பேன்.அதற்கான காரணங்களை நீங்களே கூறியிருக்கிறீர்கள்.அதுவும் கூட அந்த படங்களின் தயாரிப்பாளரோ,இயக்குனரோ செய்ய வேண்டிய வேலையது;நடித்த நடிகனைக் குறை கூறி பிரயோஜனமில்லை.

    இந்தியா செயற்கைக்கோளை அனுப்பும்போதெல்லாம்,முக்கியமான சில பாகங்களை ரஷ்யாவிடமிருந்தோ அல்லது வேறு நாட்டிடமிருந்தோ வாங்கிதான் அனுப்புவார்கள்.அப்படி அனுப்பும் செயற்கைக் கோள் வெற்றி அடையும் பட்சத்தில் நாம் சந்தோஷமடைவதில்லை? அதற்காக இதில் பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது;இந்த முக்கியமான பாகம் இந்த நாட்டிடமிருந்து வாங்கி அனுப்பியதால்தான் வெற்றி அடைந்தது என்றா சொல்லிக்கொண்டிருக்கிறோம்?.அவ்வாறு வேறு நாட்டிடமிருந்து உதிரி பாகங்கள் பெற்று எல்லா நாடுகளாலும்தான் செயற்கைக் கோள்களை அனுப்ப முடிகிறதா?.ஆரம்பத்தில் கடன் வாங்கி அனுப்பிக் கொண்டிருந்த இந்தியா,இப்போதெல்லாம் சொந்தமாக நம்முடைய நாட்டிலேயே உருவாக்கிய‌ உதிரி பாகங்களைப் பயன்படுத்த ஆரம்பிக்கவில்லையா?அதேபோல் இந்திய சினிமாவிலும் மாற்றம் வரும்.அப்படி வருகையில் அதற்கான முக்கியமான காரணகர்த்தாக்களில் கமலும் ஒருவராக இருப்பார்(மருத நாயகம் ஒரு வேளை எடுக்கப்பட்டிருந்தால்,முன்னமே நமக்கு அது கிடைத்திருந்திருக்கலாம்.) "

    ReplyDelete
  54. அது தான் உங்க கனவு நிறைவேறி ஆச்சே ,இனி மேல யாரும் கோபிரிக்ஹ்ட் இல்லாமல் படம் எடுக்க முடியாது

    வால்ட் டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், ட்வென்டித் செஞ்சுரி ஃபாக்ஸ், சோனி உள்ளிட்ட ஹாலிவுட் நிறுவனங்கள் வந்தாச்சு



    இந்தியாவிற்கு அவர்கள் கேட்கவேண்டிய கேள்வி கோர்ட்
    பார்த்து கொள்ளும்

    பஜாஜ் ஸ்கூட்டர் கதை தெரியாது

    vespa scooter contract முடிந்தும்

    அதையே பஜாஜ் என்று வந்து கொண்டு

    தான் இருந்தது பல ஆண்டுகள்

    இன்னும் இப்படி பல கதைகள் , vespa scooter

    தன models bajaj kooda போட்டி போட்டது மறந்து போச்சா ,

    இப்படி இந்தியாவில் பல கதைகள் பல துறைகளில்

    ஈ அடிச்சான் காபி தான்

    ReplyDelete
  55. பஜாஜ் மாதிரி பெரிய திருடன்

    இருக்க முடியாது இந்திய சரித்திரத்தில்


    நீங்க சொன்ன மாதிரி கமல் காபி போல வீசப

    ஸ்கூட்டரை காபி அடித்ததினால் பஜாஜ் ஸ்கூட்டரை

    யாரும் திட்டவில்லை ,காபி அடிப்பது போல பண்ணினாலே

    அது ஒரிஜினல் பன்னுபவருடைய குறைபாடு தான்

    இதை தான் கமல் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் தன்னை போல

    பேசினால் போதும் என்று உருவ வேற்றுமை ,குரல் வேற்றுமை

    மற்றும் எல்லா வித தமிழ் பேசி மிகவும் கஷ்ட படார்

    உதரணமாக குள்ளமாக அதை யாரும் எளிதில் காபி அடிக்க

    முடியாது ,தெனாலி இலங்கை தமிழில் பேசினால் அவவள்ளவு

    சீக்கிரம் மிமிக்ரி ஆர்டிஸ்ட் பேச முடியாது

    ஏதோ ஒரு நாயகன் டயலாக் தான் காக்க கத்துவது
    போல வேண்டும் என்றே அந்த வேலு நாயக்கரை

    இழிவு படுத்துவது போல செய்வார்கள்

    கதை படி வேலு நாயக்கர் இது வரை அழுதது இல்லை

    அப்படி அழுகாத மனிதன் எப்படி அழுவான் என்று

    தான் கொஞ்சம் வினோத அழுகையாக இருக்கும்


    எல்லா மிமிக்ரி ஆர்டிஸ்ட் கமல் குரல் போல பேச

    முடியும் ஆனால் அவரை போல வட்டார வழக்கு பேச அவ்வளவு

    எளிதல்ல

    ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் உன்னை போல பேசினால் நீ

    காலி என்னும் உணர்வு சாதாரண நடிகன் இருக்கும் போது மிக பெரிய ஹாலிவுட் நிறுவனங்கள் காபி அடிப்பது அல்லது எளிதில் காபி அடிப்பது போல ஏன் எடுக்க வேண்டும்

    வேண்டுமானால் எல்லா ஹாலிவுட் படங்களையும் 3 D ,IMAX FORMAT எடுக்க சொல்லவும் அதற்க்கு பட்ஜெட் தொழில் நுட்பம் கூட அவர்களுக்கு நிறைய கம்பனிகளுக்கு இல்லை என்பது தான் உண்மை .

    ReplyDelete
  56. maine pyaar kiya சல்மான்
    கானிடம்
    கதாநாயகி உடைய அப்பா கேட்பது போல தன அப்பா

    சம்பாரித்த செல்வம் இல்லாமல்

    சல்மானினால் தனியாக நிற்க முடியுமா என்றால்

    அதற்கு அவர் முடியும் என்று லாரி ஓட்டுகிறார் கல் உடைக்கிறார்

    ஒரு வெளி நாடு இந்தியர் பணக்காரர் காதலுக்காக எதுவும் செய்வார்

    இந்த கதையும்

    எனக்கும் உனக்கும் சம்திங் சம்திங்

    கதையும் என்ன வித்தியாசம்

    அதிலும் காதலுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்

    ஹீரோ ஹிந்தியில் லாரி ஓட்டுவார் ,கல உடைப்பார்

    தமிழில் விவசாயம் பண்ணுவார் அவ்வளவு தான் வித்தியாசம்

    மைனே பார் கிய maine pyaar kiya பார்த்தவர்கள் இதை தமிழில் ரசிக்க முடியுமா?

    பாச மலர் படத்தை எத்தனை முறை ரீமேக் செய்து உள்ளனர்

    தமிழில்

    அந்த மாதிரி பண்ணாமல் உலக சினிமா போல பண்ணுவதால்

    தான் கமலின் சிறப்பு காபி உரிமம் பெற்று இருக்கிறரா அல்லது
    காபி அடித்தார என்பது அனாவசியம்

    எப்படி கிழக்கு சீமையிலே பாச மலர் கதை போல

    பாச மலர் பட தயாரிபளர்களிடம் அனுமதி பெற்றார என்பது

    காபி அடித்தார என்பது நம்மக்கு தேவையா

    என்ன தான் நீங்க வருடம் பூராவும் ரூம் போட்டு யோசித்தாலும்
    cinderlla story pola thaan irukkum yosithalum
    அதை ஏற்கனவே எடுத்து இருப்பார்கள்

    ReplyDelete
  57. ரசனை என்பது அற்பமான விஷத்தை அற்புதமாக ரசிப்பது

    கமல் ஒரு அற்புதமான கலைஞன்

    ஒரு அற்புதமான விசையத்தை கூட ரசிக்க தெரியாத

    அற்பர்கள் இந்த ப்ளாக் மூலம் தெரிந்தது

    அடுத்து என்ன செய்வது

    எந்திரன் படத்தை எப்படி கேமரா துடைத்தார்கள்

    பெரு நாட்டில் எந்திரன் பட குழு சுற்று புற சூழலை

    எப்படி மாசு படுத்தியது

    என்பதை நீங்கள் சன் தொலைகாட்சியில் பார்த்து மகிழுங்கள்

    வெறும் ற்றைலேர் வெளியீடு போதுமா

    எப்படி வேலூர் பட பிடிப்பின் போது ஆம்பூர் பிரியாணி

    சாபிடார்கள் அதை சமைத்தவர் யார்

    சாப்பிட்டதில் யார் அதிகமாக சாப்பிட்டார்கள்

    என்று மிக ஆச்சர்யமான தகவல் கண்டு மகிழுங்கள்

    ReplyDelete
  58. ரசனை என்பது அற்பமான விசயத்தை அற்புதமாக ரசிப்பது

    கமல் ஒரு அற்புதமான கலைஞன்

    ஒரு அற்புதமான விசையத்தை கூட ரசிக்க தெரியாத

    அற்பர்கள் இந்த ப்ளாக் மூலம் தெரிந்தது

    அடுத்து என்ன செய்வது

    எந்திரன் படத்தை எப்படி கேமரா துடைத்தார்கள்

    பெரு நாட்டில் எந்திரன் பட குழு சுற்று புற சூழலை

    எப்படி மாசு படுத்தியது

    என்பதை நீங்கள் சன் தொலைகாட்சியில் பார்த்து மகிழுங்கள்

    வெறும் ற்றைலேர் வெளியீடு போதுமா

    எப்படி வேலூர் பட பிடிப்பின் போது ஆம்பூர் பிரியாணி

    சாபிடார்கள் அதை சமைத்தவர் யார்

    சாப்பிட்டதில் யார் அதிகமாக சாப்பிட்டார்கள்

    என்று மிக ஆச்சர்யமான தகவல் கண்டு மகிழுங்கள்

    ReplyDelete
  59. சீன் பை சீன் காப்பி அடிப்பது என்பது வேறு! ஒரு படத்தின் கான்செப்ட் பிடித்திருக்கும் பட்சத்தில்,அதைப் போன்று நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு மாற்றி படமெடுப்பது என்பது வேறு!

    நாமே ஒரு துப்பறியும் நாவல் படித்துக் கொண்டிருக்கிறோம்.படித்துக் கொண்டிருக்கும்போதே முடிவு இப்படியாகத்தான் இருக்கும் என்று யூகித்துக் கொண்டு வருவோம்.முடிவு நாம் நினைத்த மாதிரி இல்லாமல் வேறு மாதிரி இருந்து,ஆனால் நாம் நினைத்த முடிவு உண்மையிலேயே நன்றாக இருந்தால் நாம் என்ன பண்ணுவோம்.அதே போல் ஒரு கதையை வைத்துக் கொண்டு,தேவைப்படும் இடங்களிலெல்லாம் மாற்றம் செய்து, நாம் நினைத்த மாதிரி முடிவு அமைத்து அந்த கதையையும் எழுதினால் என்ன தவறு? ஆங்கிலத்தில் படித்த கதையை,நான் மேலே கூறியவாறு தமிழில் எழுதியவர்கள் யாருமில்லையா?

    எத்தனையோ இடங்களில் நாம் ஜோக்ஸ் படிக்கிறோம்.அவற்றில் பெரும்பாலானவை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டவை.அவர்களெல்லாரும் மூலத்திற்கு நன்றி தெரிவித்து விட்டுதான் பதிவு போடுகிறார்களா?

    ReplyDelete
  60. ‘மர்மயூகி‘ கமல்!

    ‘ரஜினி அங்கிளும்‘..சிறுமிகளும்!

    http://chudachuda.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete
  61. http://pitchaipathiram.blogspot.com/2010/09/blog-post_13.html
    தமிழ் சினிமா: அசலும் நகல்களும்

    Posted by சுரேஷ் கண்ணன்
    Monday, September 13, 2010


    please please c this ,thank u.

    ReplyDelete
  62. குமுதத்தின் சொதப்பல் பட்டியல்

    thanks to this link
    http://manipuram.blogspot.com/2009/08/blog-post_07.html

    ReplyDelete
  63. @ access!

    சுரேஷ் கண்ணன் எழுதிய கட்டுரையை ஏற்கெனவே படித்து அதற்கு பின்னூட்டமும் இட்டிருந்தேன்!

    இரண்டாவது கட்டுரை அறிமுகத்திற்கு நன்றி. மிகவும் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது,அதுவும் போன வருடமே!

    ReplyDelete
  64. Excellent article..Karundhel should apologise atleast now.

    ReplyDelete
  65. @ Anonymous!

    வருகைக்கு நன்றிங்க!

    ReplyDelete
  66. http://www.bollywoodtrends.net/2009/04/bollywood-and-plagiarism-list-of.html


    Bollywood and Plagiarism: List of Bollywood movies copied from Hollywood

    ReplyDelete
  67. தமிழ் சினிமா ஒரு கால கட்டத்தில் நேரடி போட்டி ஆங்கில ஹிந்தி மலையாளம் மற்றும்

    தெலுங்கு டப்பிங் படங்கள் மற்றும் சீன படங்கள் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து

    வெளியானது ,ஏதோ ஒரு பாலச்சந்தர் ஒரு பாரதிராஜா ஒரு பாக்யராஜ் ஒரு

    விசு ஒரு பாலு மகேந்திரா தான் இருந்தனர் ,

    தமிழ் சினிமா என்னும் பெயரை காப்பாற்ற

    ,அப்புறம் தொழில்நுட்பத்தில் ஆங்கில படங்களுக்கு இணையாக

    மணி ரத்னம் மற்றும் கமல் படங்கள்

    உங்கள் பாஷையில் காபி அடித்தனர்

    அதனால் தான் தமிழ் சினிமா இன்று உயிருடன் இருக்கு
    மணி ரத்னம் கமல் போன்றவர்களின் அடுத்த கட்டம் தான்]
    சங்கர்

    கலைக்காக விஞ்ஞானம? அல்லது விஞ்ஞான் திற்காக கலையா

    இதை விட மான கேடு என்ன இருக்க முடியும்

    நல்ல கதை சொல்ல தெரியனும்
    ஆனால் நல்லா விஞ்ஞானம் பயன் படுத்தனும்

    நல்லா பிரமாண்டம் எற்படதணும்
    வெறும் மார்க்கெட்டிங் பிழைப்பு
    சக மனிதர்கள் சக நடிகர்கள்
    சக தயாரிபாளர்களை வாழ விடாமல் பிச்சை எடுக்க
    வைக்க வேண்டும்
    குறைந்தது ஐம்பது படங்கள் தமிழ் சினிமாவில்
    முடித்த பிறகும் அதை வெளி இட ஆள் இல்லை
    பாவம் தயாரிபளர்கள் சொந்த காசை போட்டு
    வட்டி மேல மேல வட்டி கட்டி இன்னும் காசை கண்ணில் பார்க்க
    முடியல



    இப்போ ஒரு மனிதரின் இண்டஸ்ட்ரி

    அது ரஜினி தான்
    இப்போ தமிழ் சினிமா மானம் எங்கே போயிற்று
    படத்தின் முன்னோட்ட காட்சி கூட காசு கொடுத்து பார்க்க வேண்டும்

    அப்புறம் ஒரு குடும்ப இண்டஸ்ட்ரி
    தயாநிதி கலாநிதி உதயநிதி
    நம்மக்கு எல்லாம் பெருமை

    விசில் அடிப்பதில்
    ஜோராக விசில் அடிங்க இந்த பதிவை படித்து
    எந்திரன் போஸ்டர் வெளியீட்டு விழா

    http://shilppakumar.blogspot.com/2010/09/blog-post_17.html

    ReplyDelete
  68. உலக நாயகனும் மயிர்க்கூச்சரியும உலக நிகழ்வுகளும்

    நடிகர் கமல்ஹாசனின் ஐம்பது வருட சினிமா வாழ்க்கை ஒரு புறம் கொண்டாடபட்டுக்கொண்டு இருக்கையில் அவரை பற்றிய வேறு சில சம்பவங்கள் என் மின்னஞ்சலிலும் குறுந்தகவலிலும் வந்தது. இதுவரை யாரும் யோசித்திடாத(குறைந்தபட்சம் நான்), எதிலும் பதிக்கப்படாத மயிர்க்குசெறியும் சம்பவமாக அது இருந்தது. அந்த கருத்துக்கள் மற்றவருக்கு கொஞ்சம் புதிராக இருக்கலாம், அமானுஷ்யமாக இருக்கலாம், ஏன் சிலருக்கு சிரிப்பாகவும் இருக்கலாம். அவருடைய சினிமாக்களும் நிஜ உலக சம்பவங்களும் முடிக்கப்பட்டது போல் ஒரு தோற்றம் அளித்தது அந்த தகவல்.

    இதோ உங்களையும் குழப்ப அது என்னவென்று பார்ப்போம்.

    1978, கமலின் சிகப்பு ரோஜாக்கள் வெளிவந்தது. அவருடைய கதாபாத்திரம் பெண்களை கொல்லும் ஒரு மனநோயாளியாக இருந்தது…
    >> அடுத்த வருடம் சைக்கோ ராமன் என்பவன் போலீசில் பிடிபட்டான். நிறைய பேர்களை மூர்க்கமாக கொன்றதே அவன் செய்த குற்றம், குறிப்பாக பெண்களை…

    1988 ஆம் வருடம் வேலையில்லா திண்டாட்டத்தை சித்தரிக்கும் படமாக சத்யா வெளிவந்தது.
    >>அடுத்த இரண்டு வருடம் கழித்து இந்தியாவில் வேலையில்லா திண்டாடம் தலை விரித்து ஆடியது.
    பார்க்க: http://en.wikipedia.org/wiki/Poverty_in_India

    1992 ஆம் வருடம் தேவர் மகன் என்ற திரைப்படம் வெளிவந்து சக்கை போடு போட்டது. சமூகத்தில் நடக்கும் சாதி சண்டையை மையப்படுத்தி இருந்தது அந்த திரைபடத்தின் கதை.
    >>அடுத்தத் வருடம் தென் தமிழக மாவட்டங்களில் சாதிகலவரங்கள் வெடித்து வரலாற்றில் பதிவாகி உள்ளது.

    சுமார் 1996 ஆம் வருடம் நடந்த தொடர் நிதி நிறுவன மோசடிகளால் பொது மக்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டது அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. >>அதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பாகவே வருடம் வெளிவந்த மகாநதி திரைப்படத்தில் அதை பதிவு செய்தார் கமல்.

    2000 ஆம் வருடத்தில் வெளிவந்த ஹேராம் திரைப்படம் ஹிந்து முஸ்லிம் கலவரங்களை பற்றி அமைந்து இருந்தது.
    >>சொல்லிவைத்தார் போல் இரண்டு வருடத்தில் குஜராத் கோத்ரா சம்பவத்தில் ஹிந்து முஸ்லிம் பிரச்சனை வெடித்தது.

    சுனாமி என்று ஒரு வார்த்தையை அன்பே சிவம்(2003) என்ற திரைப்படத்தில் பயன்படுத்தினார் கமல்ஹாசன். இந்த படத்தை நன்றாக கவனித்தோர் அதை உணர்வர். சுனாமி என்கின்ற சொல் பலருக்கும் பரிட்சயம் ஆகாத சமயம் அது.
    >>சரியாக 2004 ஆம் வருடத்தில் சுனாமியால் எண்ணற்ற மனித உயிர்களை கொன்று பெருத்த சேதத்தை உருவாக்கியது.

    ReplyDelete
  69. வேட்டையாடு விளையாடு என்ற படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. மனிதர்களை கொன்று புதைப்பது தான் அந்த படத்தில் வரும் இளமாறன் மற்றும் அமுதன் என்ற இரண்டு சைக்கோ கதாபாத்திரங்களில் வேலை.

    >>மொனிந்தர் மற்றும் சதீஷ். சரியாக மூன்று மாதத்தில் நொய்டா தொடர் சைக்கோ கொலைச்சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

    அவருடைய தற்போதைய கடைசி படமான தசாவதாரம் 2008 இல் வெளிவந்தது. அமெரிக்காவில் இருந்து விமானம் மூலமாக இந்தியாவிற்கு வரும் ஒரு உயிர் கொல்லி வைரஸ் உலகை அழிக்க முற்படுவதே அந்த படத்தின் மையக்கரு.

    2009……

    >

    >

    இப்போது என்ன?

    >

    >

    நியாபகம் வருகிறதா??

    >>

    சிந்தியுங்கள்…

    >>>>>>>

    கொஞ்சம் ஜீரணிக்க கடினமாக இருக்கலாம்.

    அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் ஆரம்பமானதாக கருதப்படும். விமானம் மூலம் இந்திய வந்திருக்கலாம் என்று யூகிக்கப்படும் அந்த உயிர் கொல்லி வைரஸ் இப்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது..அதன் பெயர் தான் SWINE FLU பன்றி காய்ச்சல்

    இந்த சம்பவங்களை என்னவென்று சொல்வது? COINCIDENCE என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒற்றுமை நிகழ்வுகளா? இல்லை புலப்படாத சக்தி கமலிடம் உள்ளதா?

    எது எப்படியோ. தசாவதாரம் கிளைமாக்சில் வருவது போல் ரங்கராஜன் நம்பியோ இல்லை கோவிந்த் ராமசாமியோ எம்மக்களை அழிவிலிருந்து காப்பாற்றினால் கோடி புண்ணியம்…

    ஓம்.. ……நமோ நாராயணாய

    ReplyDelete
  70. "ஒரு ஹீரோ கஷ்ட‌ப‌ட்டு கிழவ‌னா ந‌டிச்சா அது இந்திய‌ன்.

    ஒரு கிழவ‌ன் கஷ்ட‌ப‌ட்டு ஹிரோவா ந‌டிச்சா அது எந்திர‌ன்"

    kamal rocks as indian
    rajini sucks as enthiran


    half of the money spent in enthiran is to make look good

    sorry look young sorry horrible enthiran robot


    robot is indias answer to irobot
    super man bat man spider man and all remake kitchadi of
    idiotic hollywood films


    rest is salary to top people

    ReplyDelete
  71. thaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaank uuuuuuuuuuuuuuuuuuuu
    கருட புராணம் மற்றும் ரோபோ ராமாயணம் இதிகாச மோசடி இப்போ சுஜாதா இல்லை அடுத்த படம் சங்கர் எப்படி செய்வார்,பார்க்கலாம் ,இறக்கம் இல்ல மனிதன் அரக்கன் ,அந்த அரக்கனை உருvவாகிய வசிகீரனும் அரக்கன் தான் மனிதன் இல்லை ,வசீகரன் தன காதலியை எந்திரனுக்கு விட்டு கொடுத்து இருக்கலாம் அல்லது இரும்பில் இதையம் முளைத்த எந்திரன் தன்னை படைத்த கடவுளுக்காக விட்டு கொடுத்து இருக்கலாம்

    வசீகரன் இரக்கம் இல்லாதவன் என்பதற்கு சாட்சி

    கிளைமேக்ஸ் கோர்ட் சீன் - ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

    எல்லா கலைகளும் தெரிந்தவன் எல்லா பாஷைகளும் தெரிந்தவன்
    இந்த எந்திரன் என்ற வெறும் ஆணவம் மட்டும் மிஞ்சியது
    ஒரு தியாகம் இல்லை விட்டு கொடுத்தல் இல்லை இரக்கம் இல்லை
    இதயம் முளைத்ததாக கட்டு கதை சிந்திக்க தெரிந்ததாக கட்டு கதை

    மனிதனாக அடிபடையில் தேவை இரக்கம் அது கூட வசீகரன் சொல்லி தரவில்லை தெரிந்தால் தானே சொல்லி தருவார் , இயந்திர அரக்கனை பார்க்க எல்லா மனித அரக்கர்களும் படை எடுப்பு வெள்ளி திரை நோக்கி வேறு என்னத்தை சொல்ல
    வசீகரன் ஆராய்ச்சியே மூழ்கி இருபதால் எந்திரன் கள்ள காதல் வைத்து
    இருக்கலாம் சனா கூட ,இந்த மெகா சீரியல் உலகத்தில் மேலும் பல லட்சம் கோடிகள்
    சம்பாரித்து கொடுத்து இருப்பான் இந்த எந்திரன்
    அன்பே சிவம் rocks

    எந்திரன் sucks

    sorry compassion is dead
    passion rocks
    all passionate arrakargal endorse enthiran in big way

    யாருமே கமலை நெருங்க முடியாது அன்பே சிவம் என்று சொன்னதை சுஜாதா ஆகட்டும் சங்கர் ஆகட்டும் ரஜினி ஆகட்டும்
    வெறும் மசாலா மாமனார்கள்
    அரக்கனை காட்டி கல்லா கட்டுபவர்கள்

    ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை
    மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்து தான் மிச்சம்

    ReplyDelete
  72. thaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaank uuuuuuuuuuuuuuuuuuuu
    கருட புராணம் மற்றும் ரோபோ ராமாயணம் இதிகாச மோசடி இப்போ சுஜாதா இல்லை அடுத்த படம் சங்கர் எப்படி செய்வார்,பார்க்கலாம் ,இறக்கம் இல்ல மனிதன் அரக்கன் ,அந்த அரக்கனை உருvவாகிய வசிகீரனும் அரக்கன் தான் மனிதன் இல்லை ,வசீகரன் தன காதலியை எந்திரனுக்கு விட்டு கொடுத்து இருக்கலாம் அல்லது இரும்பில் இதையம் முளைத்த எந்திரன் தன்னை படைத்த கடவுளுக்காக விட்டு கொடுத்து இருக்கலாம்

    வசீகரன் இரக்கம் இல்லாதவன் என்பதற்கு சாட்சி

    கிளைமேக்ஸ் கோர்ட் சீன் - ஒரு 1000 போலீசாரைக் கொன்ற இயந்திரன், தான் ஒரு இயந்திரம் அதனால் தன்னை தண்டிக்க முடியாது என்று வாதாடும் போது, சயின்டிஸ்ட் ரஜினி புன்முறுவல் செய்கிறார். சமூக நலன் மிகுந்த ஒரு சயின்டிஸ்ட் 1000 மக்களைக் கொன்ற வருத்தம் இல்லாமல் எப்படி அந்தமாதிரி ஒரு ரியாக்‌ஷன் தரமுடியும் ?. எடிட்டர் எப்படி விட்டார் ?.

    எல்லா கலைகளும் தெரிந்தவன் எல்லா பாஷைகளும் தெரிந்தவன்
    இந்த எந்திரன் என்ற வெறும் ஆணவம் மட்டும் மிஞ்சியது
    ஒரு தியாகம் இல்லை விட்டு கொடுத்தல் இல்லை இரக்கம் இல்லை
    இதயம் முளைத்ததாக கட்டு கதை சிந்திக்க தெரிந்ததாக கட்டு கதை

    மனிதனாக அடிபடையில் தேவை இரக்கம் அது கூட வசீகரன் சொல்லி தரவில்லை தெரிந்தால் தானே சொல்லி தருவார் , இயந்திர அரக்கனை பார்க்க எல்லா மனித அரக்கர்களும் படை எடுப்பு வெள்ளி திரை நோக்கி வேறு என்னத்தை சொல்ல
    வசீகரன் ஆராய்ச்சியே மூழ்கி இருபதால் எந்திரன் கள்ள காதல் வைத்து
    இருக்கலாம் சனா கூட ,இந்த மெகா சீரியல் உலகத்தில் மேலும் பல லட்சம் கோடிகள்
    சம்பாரித்து கொடுத்து இருப்பான் இந்த எந்திரன்
    அன்பே சிவம் rocks

    எந்திரன் sucks

    sorry compassion is dead
    passion rocks
    all passionate arrakargal endorse enthiran in big way

    யாருமே கமலை நெருங்க முடியாது அன்பே சிவம் என்று சொன்னதை சுஜாதா ஆகட்டும் சங்கர் ஆகட்டும் ரஜினி ஆகட்டும்
    வெறும் மசாலா மாமனார்கள்
    அரக்கனை காட்டி கல்லா கட்டுபவர்கள்

    ஒரு நல்ல மனிதன் மற்றும் எந்திர உறவை சித்தரிக்காமல் வெறும் அரக்க குணத்தை
    மட்டும் காட்டி மக்களை முட்டாளாக்கி பல கோடிகள் சம்பாரித்து தான் மிச்சம்

    ReplyDelete
  73. MS office, Star office, open office, lotus 123 இது எல்லாம் ஒரு மாதிரியே இருக்கு. இதுங்களோட வேலையும் same தான்.
    அப்போ இதுவும் copy ah ?

    சுஜாதா ஒருமுறை சொல்லி இருக்கார் உலகத்தி மொத்தமே 8 கதைதான் இருக்கு.....

    எப்பிடி தமிழிசையில் ஏழு சுரங்களை கொண்டு ஏகப்பட்ட மெட்டு ஊருவக்கபடுகிறதோ அதைப்போல.

    ஒரு லைன் கதை எடுத்து அதை நமக்கு ஏற்றார் போல செய்கிறது திருட்டு இல்லை.
    உன்னைப்போல் ஒருவன் ஹிந்தி படத்தை பார்த்து தமிழ் படத்தோடு ஒப்பிட்டு பாருங்கள்.
    தமிழ் படமே உயர்வாக இருக்கும்.

    ReplyDelete
  74. "Karunthel" - Kamal is making movies for ordinary people like me, not for genius (to satisfy your ego) like you who watch English movie. Everything in this world is copy...including you...you are are a copy of your father....best solution, don't watch Kamal movies or follow him.....just get lost..man...

    ReplyDelete