Wednesday, September 23, 2009

சொற்கொலை



என்னிடமிருந்து சொற்கள்
ஒவ்வொன்றாய்
உனை நோக்கி
நகரத் தொடங்கிய ஒரு கணத்தில்
யாதொரு கார‌ணம‌மும் இன்றி
ஏழு மலைகளுக்கு அப்பால் போய்
ஒளிந்து கொண்டாய்
என்னிடமும் திரும்பி வர முடியாமல்
நீ இருக்கும் இடமும் தெரியாமல்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
அவை ஒவ்வொன்றாய்
தற்கொலை செய்யத் தொடங்கின
என்றாவது ஒருநாள்
துர்கனவின் நடுவில்
நீ விழிக்க நேர்கையில்
அவற்றின் ஆன்மா சாந்தி அடையக்கூடும்...



6 comments:

  1. // என்னிடமும் திரும்பி வர முடியாமல்
    நீ இருக்கும் இடமும் தெரியாமல்
    உனக்காக காத்திருந்து காத்திருந்து
    அவை ஒவ்வொன்றாய்
    தற்கொலை செய்யத் தொடங்கின \\


    நிறாகரிக்கப்ட்ட சொற்கள் காற்றில்
    அழைந்துகொண்டிருக்கும் என்பது தெளிவான‌ கற்பனை.
    முத்தாய்ப்பாய் இருப்ப‌து க‌விதையின் தலைப்பு.

    ReplyDelete
  2. கவிதை அருமை...............

    My blog:
    http://devadhaikadhalan.blogspot.com/

    ReplyDelete
  3. @Palani

    நன்றி பழனி :-)

    ReplyDelete
  4. @தேவதை காதலன்!

    நன்றி தேவதை காதலன்.உங்க Blog Name நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  5. வழக்கம் போலவே சூப்பர்

    ReplyDelete
  6. @பின்னோக்கி: உங்கள் பின்னூட்டம் வழக்கம்போல் ஊக்கமளிக்கிறது.

    ReplyDelete