Friday, December 24, 2010

மன் மதன் அம்பு-திரை விமர்சனம்

தன் காதலியான த்ரிஷாவை சந்தேகப்படும் மாதவன்,அவரை உளவு பார்ப்பதற்காக எக்ஸ் மிலிட்டரி ஆஃபிஸர் கமலை அனுப்புகிறார்.அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கமலின் கதை,திரைக்கதை,வசனத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மன்மதன் அம்பு படத்தின் கதை.
தன்னை சந்தேகப்படும் மாதவனை விட்டுப் பிரிந்து,மன நிம்மதிக்காக த்ரிஷா ஐரோப்பா கண்டத்திற்கு பயணம் செல்வதில் படம் ஆரம்பிக்கிறது.தன் நண்பனின் கேன்ஸர் ட்ரீட்மெட்டிற்கான பணம் மாதவனிடமிருந்து கிடைப்பதற்காக,கமல் ஒரு பொய் சொல்கிறார்.கடைசியில் த்ரிஷா மாதவனைக் கைப்பிடிக்கிறாரா இல்லையா என்பதைக் காமெடி,சென்டிமென்ட் முலாம் பூசி கொடுத்திருக்கிறார்கள் கமலும்,ரவிக்குமாரும்.

பையனின் கட்டை விரல் ஆடுவதை வைத்து சங்கீதா,தன் பையன் தூங்கிகிறானா இல்லையா என்பதை தெரிந்து கொள்வது.பின்னால் நடந்து வருபவர்க்கு என்னைக் கடந்து போய் கொள்ளுங்கள் என்று கேண்ட் சிக்னல் காட்டுவது.பசங்களுக்கு பெண்களைப் பற்றி 33% அளவிற்காவது தெரியாமல் இருக்குமா என்று கமல் த்ரிஷாவிடம் கேட்பது,ஒரு உயிரும் காதலும் ஊசலாடுகிறது என்று மலையாளத் தயாரிப்பாளர் தன் படத்திற்கான டைட்டிலைப் பிடிப்பது,இன்னைக்கு மாதவன் தன்னிடம் ஸ்வீட்டாகப் பேசினார் என்று த்ரிஷா சொல்வதற்கு, தண்ணியோ என்று சங்கீதா கேட்பது,துப்பறிய ஐடியா கொடுத்தது உங்க அம்மாவா என்று மாதவனின் அப்பா அவரிடம் கவலையாய் கேட்பது,'லைன்ல பிராப்ளம் இருக்கு, கேட்கலை என்று சங்கீதா மாதவனிடம் ஃபோன் பண்னியவுடன் சொல்வது' என்று படத்தின் ப‌ல காட்சிகளில் நம்மை மனம் விட்டு சிரிக்க வைக்கிறார்கள்.அதேபோல் மலையாளத் தயாரிப்பாளர் சங்கீதாவின் பையனைப் பார்த்து 'நீ மலையாளியோ' என்று கேட்பதும், தப்பு கதா என்று கமல் தெலுங்கில் மாதவனிடம் சொல்வதற்கு மாதவன் கமலிடம், தப்பாத்தான் போயிட்டிருக்கு கதை என்பதும் கமல் டச்.

இன்டெர்வல் திருப்பம்,நீலவானம் பாடலை ரிவர்ஸிங் முறையில் படமாக்கியிருப்பது(அதுவும் வெள்ளை சுவரில் தெரியும் பெயின்டிங் கலக்கல்),கண்ணோடு கண்ணை கலந்தாளென்றால் கவிதையை ஒரே ஷாட்டில் படமாக்கியிருப்பது என்று பல இடங்களில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார்கள்.."சில நினைவுகளை மறைச்சு வைச்சுடலாம்,ஆனால் மறக்க முடியாது","நான் முட்டாள் இல்லை,இல்லைனா அந்த மாதிரி பேசாதீங்க","வீரத்தோட மறுபக்கம் மன்னிக்கிறது,வீரத்தோட உச்சகட்டம் அஹிம்சை","அவனை நோக்கி வந்துக்கிட்டு இருக்காங்க என்று மாதவனிடம் கமல் சொல்வது" என்று வசனகர்த்தா கமல் பல இடங்களில் பளிச்சிடுகிறார்.
படத்தின் பெரிய பலம் படத்தில் நடித்திருக்கும் கமல்,மாதவன்,த்ரிஷா,சங்கீதா,ரமேஷ் அரவிந்த் உள்பட அனைவரின் நடிப்பு. த்ரிஷாவின் குரலும்,டாட்டுவும் நன்றாக இருக்கின்றன.ரமேஷ் அரவிந்தின் சென்டிமென்ட் காட்சிகளும் நன்றாகப் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் பெரிதாக கவரவில்லையென்றாலும்,படத்தின் பின்னனி இசை நன்றாக இருக்கின்றது. அதுவும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் வானில் பறவைகள் பறக்கையில் நீல வானம் பாடலின் இசையை உபயோகித்திருப்பது புத்திசாலித்தனம்.மனுஷ் நந்தனின் கேமரா ஐரோப்பா கண்டத்தை அழகாகப் படம் பிடித்திருக்கிறது.

முதல் பாதி மெதுவாக செல்வது சில நேரங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.,படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.அதேபோல் கமலின் படங்களில் பொதுவாக வரும் ஆள்மாறட்டக் காமெடியும் உண்டு.கடைசியில் மாதவன் சங்கீதாவிடம் காதல் கொள்வதில் எந்த லாஜிக்கும் இல்லை.

படத்தின் அடிநாதமே த்ரிஷா ஆண்கள் பெண்களை எவ்வாறு தப்பாக நினைகிறார்கள் என்று சொல்லும் கவிதையும்,பெண்களுக்கு எந்த மாதிரி ஆண் தேவை என்று கமல் அவரிடம் சொல்லும் கவிதையும்தான்.
மன்மதன் அம்பு-வச்ச குறி தப்பவில்லை(ஓரளவிற்கு).

6 comments:

  1. Going to watch movie tonight...
    ..Lets c ..

    ReplyDelete
  2. ஏதோ தக‌டுதத்தோம் ஆகாமயிருந்தா சரி.

    ReplyDelete
  3. @ Nandha!

    Watch it and enjoy the show Nandha..

    ReplyDelete
  4. @ கா.பழனியப்பன்!

    தக‌டுதத்தோம் பெரிய அளவில் ஆகவில்லை:-)

    ReplyDelete
  5. நல்ல பதிவு.....எனக்கு படம் பிடிச்சு இருக்கு..ஆங்காங்கே கொஞ்சம் அயர்ச்சி தந்தாலும் !!!

    ReplyDelete
  6. @ கத்தார் சீனு!

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete