Monday, December 20, 2010

பூ-மாலை


என்னைப் பார்க்க வரும்
எல்லோரும் கைகளில்
பூக்களையே கொண்டு வருகிறார்கள்!

என் முன்னே
சாவகாசமாக அமர்ந்து
என்னுடன் பேசிக்கொண்டே
பூ தொடுக்க ஆரம்பிக்கிறார்கள்!

அழகிய பூக்களெல்லாம்
மாலையாகத் தொடங்கு முன்பே
இறக்கத் தொடங்கி விடுகிறேன் நான்!

4 comments:

  1. நல்லா இருக்குங்க தொடருங்க ...

    ReplyDelete
  2. பூ மாலை வாசனை அதிகம்

    ReplyDelete
  3. @ அரசன்!

    தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கு நன்றிங்க!

    ReplyDelete
  4. @ கா.பழனியப்பன்!

    நன்றி பழனி!

    ReplyDelete