Wednesday, December 15, 2010

விரலைப் பிரிந்த நகம்



ஏகாந்த இரவு
சுகமான தென்றல் காற்று
மார்கழி மாதப் பனி
புதிதாய் வாங்கிய புத்தக மணம்
இளையராஜாவின் இனிமையான இசை
மனதைத் தூண்டும் பெண்களின் பேச்சு
நண்பர்களின் உற்சாக அரவணைப்பு
மேலதிகாரியின் பாராட்டுப் பத்திரம்
உற்றார்களின் உண்மையான அன்பு
இவை எல்லாவற்றையும்
ஒரே நொடியில் ம‌றக்கச் செய்து விடுகிறது
நீ எனைப் பிரிந்த தருணம்

2 comments:

  1. நல்ல வரிகள்...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @ அரசன்!

    ரொம்ப நன்றிங்க!

    ReplyDelete