Friday, October 16, 2009

16 வயதினிலே...



சிறு வயதில்
கிளி ஒன்று வளர்த்தேன்
சிறகு முளைத்ததும்
பறந்து சென்றது.

ஆசையாய்
வளர்த்த கோழி
சொந்தக்காரர் ஒருவரின்
வருகையால் கறியாகியது.

அழகாக நீந்தித் திரிந்த மீன்கள்
என் தவறால்
ஒரு நாள் நீர்தொட்டி உடைந்து
மதிய சாப்பாட்டிற்கு குழம்பாயின

ஆசையாய் வளர்க்கும்
அத்தனையையும்
ஒரு நாள் பிரிய நேர்வதால்
எதையும் வளர்க்காமல்
சும்மாவே இருந்தேன்...

பின்னொரு நாள்
உன்னை பார்த்த பின்பு
காதலை வளர்க்க ஆரம்பித்தேன்
வழக்கம் போல்
நீயும் எனை பிரிந்து சென்றாய்

ஆனால்
இன்று வரை புரியாத ஒன்று
கிளி,கோழி,மீனை பிரிந்ததற்காவது
ஏதோ ஒரு காரணமிருந்தது...

4 comments: