Saturday, August 22, 2009

கந்தசாமி‍-விமர்சனம்


தமிழ் சினிமாவின் கறுப்பு‍‍-வெள்ளை படக் காலத்திலிருந்து எல்லா ஹுரோக்களும் பண்ணிய,கறுப்பு பணத்தை எடுத்து வெள்ளை மனம் கொண்டவர்களுக்கு கொடுத்து உதவும் ஹுரோ பற்றிய கதையை 'ஷங்கர்' பட முலாம் பூசி கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள் சுசி கணேசனும்,விக்ரமும்.சி.பி.ஐ ஆஃபிசரான விக்ரம்,கெட்டவர்களிடமிருந்து பணத்தை அபகரித்து,கஷ்டப்படும் மக்களுக்கு,கடவுள் கொடுப்பது போல் கொடுத்து உதவுகிறார்.'இடையில்' ஷ்ரெயாவுடன் மோதல்,காதல்,மெக்சிகோ என்று காதில் பூ சுத்தியிருக்கிறார்கள்.
படத்தின் ஒரே ஆறுதல் விக்ரம்.கொஞ்சம் வயசானது போல் தோன்றினாலும்,இந்தப் படத்தில் படு ஸ்மார்ட்டாக இருக்கிறார்.ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.முழுப் படத்தையும் ஓரளவிற்காவது பார்க்கமுடிவது 'ஜென்டில்மேனா'க நடித்திருக்கும் விக்ரமால்தான்.கேமராமேனின் உழைப்பு படம் முழுவதும் தெரிகிறது.குறிப்பாக ஸ்ரெயாவை 'காட்டும்' இடங்களில்.
வடிவேலு காமெடியும் வர வர விவேக் காமெடி போல் மொக்கையாகிக் கொண்டே வருகிறது.தெலுங்கு நடிக‌ர் கிருஷ்ணா எப்படி ஒன்பது வயதிலேயே சி.பி.ஐ-ல் சேர்ந்தார் என்று தெரியவில்லை.பிரபுவிற்கு யாராவது பிரமோஷன் கொடுத்தால் தேவலை.'சாமுராய்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட பின்னணி இசையை அதே போன்ற காட்சிகளுக்கு அப்படியே பயன்படுத்தியிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத்.
இந்திய தபால் துறையில் தேவையில்லாமல் ஏன் இவ்வளவு முழு நேர ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் என்ற நியாயமான கேள்வி(?) இப் படம் பார்க்கும்பொழுது எழுவதை தவிர்க்க முடியவில்லை.சுசி கணேசன் இந்தப் படம் ஆரம்பிக்கும் முன் 'படம் நன்றாக‌ வர வேண்டும்' என்று 'கந்த‌சாமிக்கு' ஒரு லெட்டர் எழுதி போட்டிருந்தால் நல்லது என்று தோன்றுகிறது.

கந்த(ல்)சாமி.

2 comments:

  1. mothathil....kandhasaamy.... nondhasaamy aayiruchu....

    They have wasted the efforts of vikram......

    ReplyDelete
  2. இருந்தாலும் ஒரு தடவை பார்க்கலாம் :-)

    ReplyDelete