Sunday, August 9, 2009

தொலைந்(த்)த கனவு...



பெருமழை பெய்து ஓய்ந்திருந்த‌
ஒரு பின்னிரவில்
ஆழ் மனப்பரப்பில் இருந்த‌
என் கனவுகள்
ஒவ்வொன்றாய் சேக‌ரித்து
புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒவ்வொரு க‌ன‌விலும் நீ
என்னுட‌ன் இருந்த‌ க‌ணங்க‌ள்
இதய‌ வெற்றிட‌த்தை
நிர‌ப்ப‌த் தொட‌ங்கிய‌ வேளையில்
க‌ழிவிர‌க்க‌ம் அதிக‌மாகி
என் க‌விதைக்கான‌
த‌லைப்பை எழுதத் தொட‌ங்கினேன்...

3 comments:

  1. Very good title.... super mohan... keep posting....

    ReplyDelete
  2. நல்லா இருக்கு, வாழ்த்துக்கள்!

    ReplyDelete