Wednesday, August 18, 2010

பதிவுலகில் நான்-தொடர்பதிவு

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மோக‌ன்.

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என்னுடைய‌ முழு பெய‌ர் மோகன் ராம்குமார். ஆனால் எல்லோரும் என்னை மோக‌ன் என்றே கூப்பிடுவ‌தால் நானும் மோக‌ன் என்றே வைத்துக்கொண்டேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

ரொம்ப‌ நாட்களாக‌வே ப‌ல‌ருடைய ப‌திவை ம‌ட்டுமே ப‌டித்துக் கொண்டிருந்தேன்.ஒரு நாள் க‌ன‌வில் நான் ஒரு ப்ளாக் ஆர‌ம்பித்து ஒரு ப‌திவு போடுவ‌து போல‌வும்,அத‌ற்கு நான்கு பேர் வ‌ந்து க‌மெண்ட் போடுவ‌து போல‌வும் ஒரு க‌ன‌வு வ‌ந்தது.ம‌றுநாளே மிக‌வும் குஷியாகிப்போய் இந்த‌ப் ப‌திவுலகில் என் கால‌டி(கை) எடுத்து வைத்தேன்.

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

என்னுடைய ந‌ண்ப‌ர்க‌ளை க‌மெண்ட் மட்டுமே போட‌ சொன்னால் ஒரு ப‌திவிற்கோ அல்ல‌து இர‌ண்டு ப‌திவிற்கோதான் போடுவார்கள் என்று நினைத்து ந‌ண்ப‌ர்க‌ள் சில‌ரை ப்ளாக் ஆர‌ம்பிக்க‌ தூண்டினேன்(குறைந்த‌ ப‌ட்ச‌ம் அவ‌ர்க‌ளுக்கு நான் க‌மென்ட் போட‌ வேண்டுமே என்ப‌தற்காக‌ எனக்கு வந்து க‌மெண்ட் போடுவார்க‌ள் என்று நினைத்து).பெரும்பாலானோர் ப‌திவு போடுவ‌தற்காக‌ நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் வைத்து இருந்தாலும் நான் எழுதுகின்ற க‌விதைக்கெல்லாம்(?) க‌மெண்ட் போட‌ வேண்டுமே என்பதற்காக பயந்து த‌ங்க‌ளுடைய‌ ப்ளாக்கையே அப்டேட் பண்ணுவதில்லை. தமிழிஷ்,த‌மிழ்ம‌ணத்தில் இணைப்பதன் வாயிலாக‌ என் ப்ளாக்கை மற்றவர்களிடம் எடுத்து செல்ல முடிகிறது..

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என‌க்கு சொந்தமாக‌ எதுவுமே இல்லாமல் போய்விட்டதால், இப்ப‌ வ‌ரைக்கும் சொந்த‌ விச‌ய‌ம் எதுவுமே என் ப‌திவில் எழுதிய‌தில்லை.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

ப‌திவுகள் மூல‌ம் ச‌ம்பாதிப்பதற்காக‌-ந‌ண்ப‌ர்க‌ளை ம‌ட்டும்.

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

தாய் மொழி தமிழிலேயே பெரிதாக எதுவுமே எழுத‌ முடிய‌வில்லை என்ப‌தால் நீங்கள் படித்து கொண்டிருக்கின்ற இந்த‌ ஒரு ப்ளாக் ம‌ட்டும்தான்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

தின‌மும் ஒரு ப‌திவு போட‌வேண்டுமென்ப‌த‌ற்காக‌ சுவாரசியமில்லாத ஒன்றை ப‌திவாய் போடும் ப‌திவ‌ர்க‌ள் மேல் கோப‌ம். பொறாமைப் ப‌ட‌ வைத்த பதிவ‌ர்க‌ள் என்றால் நான் நெடு நாட்க‌ளாய் ப‌டித்து வ‌ரும் அய்ய‌னார்,ஜ்யோவ்ராம் சுந்த‌ர்,மோக‌ன் தாஸ்,ராஜா சந்திரசேகர் ம‌ற்றும் ப‌ல‌ர்.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

என் முதல் ப‌திவை ப‌டித்து பாராட்டிய‌து ப‌ழனிய‌ப்ப‌ன்(க‌மென்ட் போட‌ சொல்லி அவனை ரொம்ப‌வே டார்ச்ச‌ர் ப‌ண்ணினேன் என்ப‌து வேறு விச‌ய‌ம்)

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.

வாழும் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் முழுமையாக அனுப‌விப்ப‌தற்கு ப‌திவுல‌க‌ம் மிக‌வும் உறுதுணையாக இருக்கிற‌து.ப‌திவுல‌கின் மூல‌மாக‌ என்னுடைய‌ வேலை விச‌ய‌மாக‌வும் அதிக‌மாக க‌ற்றுக் கொண்டிருக்கிறேன்.பதிவுலகம் கூட பெண் போன்றுதான்,நம்மை ஆக்கவும் செய்யும்;அழிக்கவும் செய்யும்.

தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் மனோவிற்கு மிக்க நன்றி!

No comments:

Post a Comment