Monday, June 21, 2010

ராவ‌ணன்- திரை விமர்சனம்


கமல் 'விருமாண்டியில்' முயற்சித்த உக்தியையே கொஞ்சம் மாற்றி,மலையூர் மம்பட்டியான் காலத்திய கதையை இராமயண முலாம் பூசி மணிரத்னம் கொடுத்திருக்கும் படம்தான் 'ராவணன்'.

தன்னுடைய‌ த‌ங்கையின் வாழ்க்கையை சீர‌ழித்த போலிஸ்கார‌ர்க‌ளைப் ப‌ழி வாங்குவ‌தற்காக, SP பிருத்விராஜின் ம‌னைவி ஐஸ்வ‌ர்யாராயைக் காட்டுக்குள் தூக்கிக் கொண்டு வ‌ந்து விடுகிறார் விக்ர‌ம். பிருத்விராஜ் காட்டுக்குள் சென்று எப்ப‌டி த‌ன்னுடைய‌ ம‌னைவியை மீட்கிறார் என்ப‌துதான் கதை.

ப‌ட‌த்தில் பாட‌ல்க‌ள்,ஆக்ஷன் காட்சிகள் முதற்கொண்டு எந்த‌க் காட்சியுமே ம‌னதில் நிற்ப‌து போல் இல்லை. ஃப்ளாஸ்பேக் கூட‌ ந‌ம் ம‌ன‌தைத் தைப்ப‌த‌ற்கு முன்பே முடிந்து விடுகிற‌து.விக்ர‌மிற்கு ஐஸ்வ‌ர்யாராயின் மேல் காதல் வ‌ருவ‌தற்கு அழுத்த‌மான‌ காட்சிக‌ள் எதுவுமே இல்லாம‌ல் இருக்கிறது."சிவ‌ப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் கட‌வுளும் கிடையாது. க‌ருப்பாக‌ இருக்கிற‌வ‌னெல்லாம் க‌ய‌வ‌னும் கிடையாது" என்ப‌துதான் மணிரத்னம் சொல்ல வந்த விசயமாக இருந்தாலும் கூட,படத்தில் விக்ரம்,ஐஸ்,பிருத்விராஜ் போன்றவர்களின் பாத்திரப்படைப்பில் குழப்பமே மேலோங்கி இருக்கிறது.

ஐஸ்வ‌ர்யாவின் சுடிதாரைக் கூட‌ விர‌லால் தொடாம‌ல் விக்ர‌ம் த‌விர்ப்ப‌து,உங்க‌ளுக்கு க‌ல்யாணம் ஆகாம‌ இருந்திருந்தா எங்கூட‌ இருப்பீங்க‌ளா? என்று விக்ர‌ம் ஐஸிட‌ம் கேட்ப‌து என்று சில‌ இட‌ங்க‌ளில்தான் விக்ர‌ம் ஐஸ்வ‌ர்யா ராயின் மீதான த‌ன் காத‌லை வெளிப்படுத்துகிறார்.

"பொம்பளைங்க கெட்ட வார்த்தை பேசுனாக் கூட தாங்கிக்கிடலாம்;ஆனால் அழுதாத்தான் தாங்கிக்க முடியாது.என் புருஷன் ஒத்த கையில பைக் ஓட்டினா சர்க்கஸ்ல ஓட்டுற மாதிரி இருக்கும்" என்று படத்தின் மிக சில இடங்களில்தான் சுகாசினியின் வசனம் நன்றாக இருக்கிறது.படம் முடியும்போது வரும் 'நான் வருவேனே,மீண்டும் வருவேனே' என்று ரகுமான் பாடும் பாடல் நன்றாக இருக்கிறது.அபிஷேக் பச்சன் நடிப்பு போன்று செயற்கையாக இல்லாமல் விக்ரமின் நடிப்பு படத்தில் இயல்பாக இருக்கிறது. இந்தியாவில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இருக்கின்றன என்பது படத்தை பார்க்கும்போது தெரிகிறது.

ஆர‌ம்ப‌த்தில் வில்லனாக‌த் தெரியும் விக்ர‌ம் க‌டைசியில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்ப‌த்தில் ந‌ல்ல‌வ‌னாக‌த் தெரியும் பிருத்விராஜ் க‌டைசியில் கெட்ட‌வ‌னாக‌த் தெரிகிறார்.ஆர‌ம்பத்தில் போர‌டிக்கும் ப‌ட‌ம் க‌டைசியில்(ம‌ட்டும்) ந‌ன்றாக‌ இருக்கிறது.

ம‌ணிர‌த்ன‌ம் சார்,நீங்க‌ள் த‌மிழுக்காக‌ ம‌ட்டும் எடுக்கும் ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌ இருக்கின்றன‌.இந்திக்காக‌ ம‌ட்டும் எடுத்த‌ தில்சே,குரு போன்ற ப‌ட‌ங்க‌ளும் ந‌ன்றாக‌வே இருந்தன‌.இர‌ண்டு மொழிக்கும் சேர்த்து எடுக்கும் ப‌ட‌ங்க‌ள் ம‌ட்டுமே(இத‌ற்கு முன்பு யுவா-ஆயுத‌ எழுத்து) ச‌ரியாக‌ வ‌ருவ‌தில்லை.இனிமேலாவ‌து ஏதாவது ஒரு மொழியை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு படம் எடுங்களேன்.

இந்த‌ப் ப‌ட‌த்தின் த‌மிழ் ப‌திப்பில் விக்ர‌ம் ராவ‌ணனாக‌வும்,இந்தி ப‌திப்பில் ராம‌னாக‌வும் ந‌டித்துள்ளார்.ம்...நாம் ராம‌னாக‌ இருப்ப‌தும்,ராவ‌ணனாக‌ இருப்ப‌தும் ந‌ம்மை 'இய‌க்குப‌வர்' கையில்தான் இருக்கிற‌து போல்.

ராவ‌ணன்‍‍-க‌தாக‌லாட்சேப‌ம்

4 comments:

  1. படத்தை பார்த்து முடித்த பிறகு
    பக்கத்துக்கு இருக்கைக்காரரிடம் கேட்ட கேள்வி:-
    "நீங்க நல்லவரா? கெட்டவரா?

    அதற்க்கு அவர் சொன்ன பதில்:-
    "போகப் போகத் தெரியும்"

    ReplyDelete
  2. விமர்சனம் மிக இயல்பாக இருக்கிறது.

    மனோ

    ReplyDelete
  3. @ Advocate P.R.Jayarajan!

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க‌ நன்றிங்க!

    ReplyDelete
  4. @ MANO!

    நன்றி மனோ!

    ReplyDelete